மாயக்கல்லில் சிலையகற்றப்படும் என்றார்கள்ஆனால் இப்போது விகாரை கட்டப்படுகிறது.
இதனை தடுத்து நிறுத்த வேண்டுமானால் முஸ்லிம் கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைபுடன் சேர்ந்து பயணிப்பதனால் தான் அதனை தடுக்க முடியும் செல்வம் ஜீவராசா -
அம்பாறை, இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட மாயக்கல் மலையடியில் அமைக்கப்பட்டு வரும் பௌத்த மடாலயத்தை உடன் நிறுத்துமாறு கோரி மக்கள் களைப்டைந்துள்ளார்கள், கடந்த இருவருடங்களுக்கு முன்பு மாயக்கல் மலையடியில் திடீரென வைக்கப்பட்ட பௌத்த புத்தர் சிலையொன்றின் காரணமாக ஏற்பட்ட சர்ச்சைக்குப் பின்னர்,
தமன பொலிஸாரினால் அம்பாறை நீதிமன்றத்தில் பெறப்பட்ட உத்தரவின் பேரில் இப்பிரதேசத்திற்குள் எவரும் செல்லக் கூடாதென தடையுத்தரவு விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது டயாகமகே அதன் நிர்மாணப் பணிகள் முன்னெடுத்து வருவதானால் அங்கு வாழ்ந்து வரும் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சமும், பீதியுமான நிலை தோன்றியுள்ளது.
இதன் நிர்மாணப் பணியை உடன் தடை செய்வதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் கோரும் மகஜரை கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பெளத்தர்கள் இல்லாத மாணிக்கமடு பிரதேசத்தில் நூறுவீதம் தமிழ் மக்களின் குடியிருப்புக்களைக் கொண்டதுடன், மலையைச் சற்றி வர முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளும் அமையப்பெற்றதே மாயக்கல்லி மலையாகும்.
சிறுபான்மை மக்களின் உரிமைக் குரலாகவும், பாதுகாப்பாகவும் அமைவோம் என்று சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் இவ்வாறான இனவாதப் பயங்கரவாதத்தை கண்டுகொள்ளாமல் இருந்து வருவதனை நாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த மலையில் வைக்கப்பட்ட சிலை ஓரிரு மாதங்களுக்குள் அகற்றுவோம் என முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் கூறியமை , ஒரு கண்துடைப்பும் முஸ்லிம் கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது கவலையளிப்பதாக அம்மக்கள் கவலை தெரிவிப்பு.
மேலும் இது தொடர்பாக தொலைபேசி ஊடாக பேசிய போது ஹக்கீம் அழைப்பை துண்டித்ததாகவும் மா.ச.உ தவம், மாஹிர் தமக்கு இது பற்றி தெரியாது எனவும் தொடர்பை துண்டித்ததாக இறக்காம வர்த்தக சங்கம் தெரிவித்தது. மேலும் கட்சி வழங்கிய 1000 வாக்கூறுதிகளில் ஒன்று கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பலம் பொருந்திய த.தே.கூட்டமைப்புடன் சேர்ந்து பயணிப்பதே சிறுபாண்மை மக்களுக்கு நன்மையளிக்கும்.
செல்வம் ஜீவராசா -
சம்மாந்துறை
