ஆலோசனை வழங்குகிறது சாய்ந்தமருது மாளிகைகாடு இளைஞர் தலைமைத்துவ பேரவை
தேர்தலில் போட்டியிடுவதற்கு நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் மருதூர் எழுச்சியின் போது முக்கிய வகிபாகத்தை அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, எனினும் அவர்களுக்கிடையான விட்டுக்கொடுப்பின் அடிப்படையில் தான் தற்போதயே உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள், அவர்கள் விட்டுக்கொடுப்புக்கள் பெரிதும் மதிக்கத்தக்கவகைகள்.
மருதூர் உள்ளுராட்சி சபைக்கான முன்னெடுப்புகளும்; கல்முனை மாநகர சபை மற்றும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் பதவிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பதும், குறித்த நபர்கள் சபை உறுப்பினராக இருந்தால் தான் சபையை பெறமுடியுமென யாரும் கூறுவார்களாயின் அதற்கு அவர்களின் அறியாமையே காரணம், ஏனெனில் கல்முனை மாநகர சபையில் நிதிக்குழுவை கைப்பற்ற வியூகம் அமைத்த நாம், இன்னமும் மருதூர் சபைக்கு ஆதரவான ஒரு பிரேரணையை நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றமை வருத்தத்தை தருகின்றது. ஆயினும் இரண்டு வருட காலத்தை அண்மித்த போதிலும் இதற்கான எந்தவித பூர்வாங்க முன்னேடுப்புக்களும் நடைபெறாமல் இருக்கும்போதும், கட்டாயமான பெண்கள் நியமனத்திற்கு, நியமிக்கப்பட்ட பெண்கள் உறுப்பினர்களை மட்டும் சுழற்சி முறையில் வழங்குவதற்கு அவர்களை கட்டாயப் படுத்துவது ஒரு சிறந்த நடவடிக்கையும் அல்ல, இது ஆண் மேலாதிக்கத்தால் நியதியற்று நடப்பது கண்டிக்க தக்கது, நியமிக்கப்பட்ட பெண் உறுப்பினர்கள் மருதூர் சபைக்கான போராட்டத்தில் முழுமையான பங்களிப்பை வழங்கினார்கள் என்பதில் சந்தேகமில்லை, சில தெரிவு செய்யப்பட்ட ஆண் உறுப்பினர்களின் பங்களிப்பை விட கூடுதலாகவே அவர்களின் பங்களிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான அவர்களின் தியாகங்களுக்கு மத்தியில், அவர்களை மாத்திரம் பதவியிலிருந்து விலகுமாறு கட்டாயப்படுத்துவது எந்தவிதத்திலும் நியாயமான செயற்பாடு இல்லை, நியாயாப்படுத்தவும் முடியாது.
மாறாக மருதூர் மாளிகா உறுப்பினர்கள் அனைவரும் தனது பதவிகளை சுழற்சி முறையில் தேர்தலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வழங்க முன் வருவார்களானால், விட்டுக் கொடுத்தவர்களின் தியாகங்களுக்கு மதிப்பளிப்பதாக அமைவது மட்டுமல்லாமல், உறுப்பினர்கள் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றங்களுக்கும் பதில் கொடுப்பதாகவும் அமையும். இதே சுழற்சி முறையான செயற்பாடு தேசிய நல்லாட்சிக்கான இயக்கத்திடம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
