மீகொடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குறித்த பஸ்ஸில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், முழுமையாக எரிந்து நாசமாகி உள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரனை - கொழும்பு பயணிகள் பஸ் ஒன்றைப் புதுப்பிக்கும் நடவடிக்கைக்காகக் கொண்டு செல்லும் போது, குறித்த பஸ்ஸின் பின்பக்கத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.
குறுகிய நேரத்திற்குள் பஸ் முழுமையாகத் தீப்பற்றி எரிந்துள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பஸ் தீப்பற்றியவுடன் பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து இத்தீயைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், குறித்த பஸ் முழுமையாகத் தீப்பற்றி அழிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை எனவும், இச்சம்பவம் தொடர்பில் மீகொடை பொலிஸார் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.