கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த சாம்பலான சொகுசு பஸ்

 
ஐ. ஏ. காதிர் கான்-

கொழும்பு - ஹைலெவல் வீதியில் பயணித்த சொகுசு பஸ் ஒன்று, திடீரென தீப்பற்றி எரிந்தமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மீகொடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குறித்த பஸ்ஸில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், முழுமையாக எரிந்து நாசமாகி உள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரனை - கொழும்பு பயணிகள் பஸ் ஒன்றைப் புதுப்பிக்கும் நடவடிக்கைக்காகக் கொண்டு செல்லும் போது, குறித்த பஸ்ஸின் பின்பக்கத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.
குறுகிய நேரத்திற்குள் பஸ் முழுமையாகத் தீப்பற்றி எரிந்துள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

பஸ் தீப்பற்றியவுடன் பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து இத்தீயைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், குறித்த பஸ் முழுமையாகத் தீப்பற்றி அழிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை எனவும், இச்சம்பவம் தொடர்பில் மீகொடை பொலிஸார் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -