அண்மையில் குருநாகல் மாவட்டத்தின் அதிகமான பகுதிகளில் நடைபெற்ற இனவாத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட சுமார் 21 பள்ளிவாயள்களுக்கான நஷ்டஈடுகளை பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் முன்னாள் வடமேல் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட தலைவருமான நஸீர் (MA) மேற்க் கொண்ட முயற்சி இன்று (18) வெற்றியளித்தது.
இதன்டி ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சர் சஜித் பிரேமதாசவின் மூலமாக அனைத்து பள்ளிவாயள்களுக்குமான நஷ்டயீடுகள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர் ஹலீம் பாராளுமன்ற உறுப்பினர்களான பௌசி, ஹர்ஷன ராஜகருணா, குளியாப்பிடிய பிரதேசசபை பிரதி தலைவர் இர்பான், பிரதேசசபை உறுப்பினர்களான சபீர், ஜாபிர்,ரிஷான்,ரிபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
