கல்முனைக்குச் சென்ற அமைச்சர்களான மனோ, தயா மீது ஆத்திரமடைந்த மக்கள் தாக்குதல்


நூருள் ஹுதா உமர்-

ல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை குறிக்கோளாக கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மத குருமாரின் போராட்டம் ஐந்து நாட்களை இன்று அடைந்துள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை காலை முதல் பிரதேச செயலகத்தின் எதிரில் உண்ணாவிரத போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் ,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு, ஹிந்து மத பூசகர்கள், தேவாலய பாதிரியார்கள், அவர்களுடன் கல்முனை மாநகரசபை கௌரவ உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோரும் கலந்து கொண்டு. இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த போராட்டத்தில் பிரதேச சமூக நல அமைப்புக்களின் சில பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். அன்று முதல் இன்றுவரை தினம் தினம் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் ஆதரவாக களமிருங்கியிருந்தனர். ஐந்தாவது நாளாக தொடரும் சாகும் வரையிலான போராட்டத்திற்கு மக்களின் ஆதரவும் கூடிவருகிறது.

போராட்டகார்கள் தாம் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும் எங்கள் விடயத்தில் அரசாங்கம் பொடுபோக்காக இருப்பதாகவும் உடனடியாக இந்த விடயத்தை கவனத்தில்கொண்டு தீர்வது காணும் விதமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐந்தாவது நாளான இன்று மாலை இவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு இந்து விவகார சமூக நல்லிணக்க அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் அமைச்சருமான தயா கமேக அவர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோருடன் அதிகாரிகளும் கலந்துகொண்டு உண்ணாவிரத போராட்டகாரர்களுடன் கலந்துரையாடினார்கள். 

அப்போது உள்நாட்டு அமைச்சரின் வாக்குறுதி வாசிக்கப்பட்ட போது தமிழ் மக்கள் கடுமையாக கொந்தளித்து தமது எதிர்ப்பை கூச்சலிட்டு வெளியிட்டனர். தொடர்ந்தும் போராட்டக்காரர்களை சமாதானபடுத்த எடுத்த சகலமுயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் மக்களால் அரசியல்வாதிகள் இங்கிருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் ஆத்திரமடைந்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட அனைவரையும் நோக்கி தாக்குதலை மேற்கொள்ள ஆரம்பித்தனர். பொலிஸாரும், விசேட அதிரடி படையினரும் தலையிட்டு அவர்களை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -