மாநகர சபை கட்டளைகள் சட்டம் தொடர்பிலான அறிவீனம் காரணமாகவும் எமது மாநகர சபையை முடக்க வேண்டும் என்ற சூழ்ச்சியுடனுமே எதிரணியினர் சபையை குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகர மக்களுக்கு முதல்வர் ஆற்றிய விசேட உரையின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 28ஆம் திகதி கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வில் ஏற்பட்ட அமளிதுமளி, அதனைத் தொடர்ந்து எதிரணியினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் பொருட்டே முதல்வர் இந்த உரையை நிகழ்த்தினார்.
கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் இருந்து ஊடகங்கள் முன்னிலையில் ஆற்றிய அந்த உரையில் அவர் தெரிவித்த முக்கிய விடயங்களின் தொகுப்பு வருமாறு;
"மாநகர சபையின் நிதிக்குழு என்பது வெளிப்படைத்தன்மைக்காக விடயங்களை ஆற்றுப்படுத்தி கலந்துரையாடல் செய்வதற்கான குழுவேயன்றி, அவற்றை பிரேரித்து, ஆமோதித்து, தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான குழுவல்ல. இது தொடர்பில் மாநகர சபைகள் கட்டளைகள் சட்டத்தின் பிரிவு-28 இல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வரவு, செலவு சம்மந்தப்பட்ட விடயங்கள் நிதிக்குழுவில் கலந்துரையாடப்பட்டு, அறிக்கையிடப்பட வேண்டும் என்றே அந்த சட்டம் கூறுகிறதே தவிர தீர்மானிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.
நிதிக்குழுவில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய அறிக்கை மாதாந்த பொதுச் சபை கூட்டத்தில் முதல்வரினால் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த அறிக்கையை ஓர் உறுப்பினர் பிரேரிக்க, மற்றொரு உறுப்பினர் ஆமோதித்தால் முதல்வர் அதனை ஏற்றுக் கொண்டு தீர்மானமாக அறிவிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம். அதேவேளை அந்த அறிக்கையை சபை ஒட்டுமொத்தமாக நிராகரித்தாலும் முதல்வர் தனக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அதிகாரத்தின் மூலம் தற்துணிவில் அதனை அங்கீகரிக்க முடியும்.
ஆனால் இது விடயத்தில் எதிரணி உறுப்பினர்கள் தெளிவில்லாமல் பேசுகின்றனர். தாமும் குழம்பி, மற்றவர்களையும் குழப்ப முற்படுகின்றனர். கணக்கறிக்கையையும் நிதிக்குழு அறிக்கையையும் விளங்கிக்கொள்ள முற்படாமல், சபைக்கூட்டங்களை குழப்ப முற்படுகின்றனர். மாநகர சபையின் செயற்பாடுகளை ஒட்டுமொத்தமாக முடக்க வேண்டும் என்ற திட்டத்துடன் எதிரணியினர் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.
நிதிக்குழு விடயத்தில் என்னுடன் முரண்படுகின்ற உறுப்பினர்கள், அவர்கள் முன்வைக்கின்ற வாதங்கள்தான் சரியென்றால், என்னை விட பாண்டித்தியம் பெற்ற சட்டத்தரணிகளிடம் ஆலோசனை பெறுங்கள். உங்கள் வாதம்தான் சரியென்று அவர்களும் கூறினால் நீதிமன்றம் சென்று தீர்வைக் கோருங்கள். பொதுவாக எந்தவொரு விடயத்திலும் மாநகர சபைகள் கட்டளைகள் சட்டத்தை நான் மீறி செயற்படவில்லை. அவ்வாறு நான் மீறி செயற்பட்டால் நீதிமன்றம் சென்று எனக்கெதிராக தடையுத்தரவை எடுத்து வாருங்கள் என்று சவால் விடுக்கின்றேன்.
தற்போதைய நடப்பாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் ஏலவே அங்கீகரிக்கப்பட்டதாகும். அதில் அனைத்து செலவீனங்களுக்குமான ஏற்பாடுகள் உண்டு. வாகனங்களை நிறுத்துவதற்கான ஒதுக்கீடுகளும் அந்த பட்ஜெட்டில் இருக்கிறது.
உதாரணமாக அந்த பட்ஜெட்டில் வாகன பராமரிப்புக்கு 03 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். எமது சபையில் 20 வாகனங்கள் உள்ளன என்றும் வைத்துக்கொள்வோம். அவற்றுள் ஒரு வாகனம் பழுதடைந்து விட்டதென்றால், அதற்கு ஐம்பதாயிரம் ரூபா செலவாகும் என்றால், அது தொடர்பில் நிதிக்குழுவில் கலந்துரையாடி விட்டு, உரிய வேலையை முறைப்படி முன்னெடுக்க முடியும். ஏனெனில் அச்செலவு உள்ளடங்கலான பட்ஜெட் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு விட்டது. இதனை நிதிக்குழுவில் கலந்தாலோசிப்பதென்பது எந்த வாகனத்திற்கு எப்படி செலவு செய்யப்போகிறோம் என்பதற்கான வெளிப்படைத்தன்மைக்கும் ஜனநாயகத்துக்குமாகவே. நிதிக்குழுவில் இவ்வாறு கலந்துரையாடப்பட்ட விடயம் பொதுச் சபைக்கும் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும்.
இதனை நிதிக்குழுவோ பொதுச் சபையோ அங்கீகரிக்கவில்லை என்பதற்காக திருத்தப்பட வேண்டிய பழுதடைந்த வாகனத்தை அப்படியே சும்மா போட்டு விட முடியாது.
மாநகர சபை நிதியை கண்டவாறு செலவழித்து விட முடியாது. உரிய செலவீனத்தை செய்வதற்கு பல படித்தரங்களை முறையாக நிறைவேற்றப்பட வேண்டும். ஒரு பொருளை கொள்வனவு செய்வதென்றால் ஐந்து கொட்டேஷன் பெறப்பட்டு, குறைந்த விலையில் பெறக்கூடிய பொருத்தமான இடம் எது என உத்தியோகத்தர்களினால் தெரிவு செய்யப்பட வேண்டும். இதற்காக ஒரு பெறுகைக்குழு இருக்கிறது. இதன்போது பல அறிவுறுத்தல்கள்- பல நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இவை எல்லாம் தேசிய மாறும் மாகாண கணக்காய்வு திணைக்களங்களின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். பிழைகள் நடந்திருந்தால் சம்மந்தப்பட்டோர் தண்டிக்கப்படுவார்கள்.
எனது கை மிகவும் சுத்தமானது. எனது இருபது வருட கால அரசியல் பயணத்தில் அந்த அரசியலினால் பத்து ரூபா கூட உழைத்திருக்கவில்லை. இது எல்லோரும் அறிந்த விடயம். எனது நிர்வாகத்தினரும் அப்படியே சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் விழிப்பாக இருக்கிறேன். எவரும் ஒரு சதம் கூட சுரண்ட இடமளிக்க மாட்டேன். எனது நிர்வாகத்தில் ஊழல், மோசடிக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். இது விடயத்தில் எமது உத்தியோகத்தர்களும் நேர்மையாகவே செயற்படுகின்றனர்.
கடந்த சில மாதங்களாக எமது மாநகர சபையின் நிதிக்குழு உறுப்பினர்களின் செயற்பாடுகளை நான் அவதானித்து வந்துள்ளேன். இந்த மாநகர சபையினால் முதல்வர் ஆகிய நான் மக்களுக்கு எந்தவித சேவையையும் முன்னெடுத்து விடக்கூடாது என்பதற்காக சபையை முடக்கும் உணர்வை அவர்கள் வெளிப்படுத்தி வந்தார்கள். உத்தியோகத்தர்களை அவமானப்படுத்தினார்கள். இவ்வாறு பல விடயங்கள் நடந்தேறி வந்தன. இவ்வாறான செயல்களை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. எனவேதான் எல்லாவற்றையும் சட்டப்படி செய்வதற்கு தீர்மானித்துள்ளேன்.
இனிமேல் நிதிக்குழு கூட்டத்தில் பங்குபற்றும் உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, கையொப்பங்கள் பெறப்படும். விடயங்கள் கலந்துரையாடப்படும். ஆனால் தீர்மானம் என்ற பெயரில் பிரேரிப்பு, ஆமோதிப்பு என்ற விடயத்திற்கு இடமிருக்காது. நிதிக்குழு தொடர்பிலான அனைத்து விடயங்களும் சட்டத்திற்கமைவாக இடம்பெறுமேயன்றி சம்பிரதாய முறைப்படி நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது.
மாநகர சபைகள் சட்டம் பற்றிய போதிய தெளிவு எனக்கிருக்கிறது. இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக நடைமுறையில் இருந்து வந்த சம்பிரதாயங்களை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என்கின்ற அவசியம் எனக்குக் கிடையாது.
எமது ஒவ்வொரு சொல், செயல் பற்றியும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனி நபர்களினாலும் பொது அமைப்புகளினாலும் கேள்வி எழுப்பப்படுகிறது. எப்போதோ யாரோ செய்து விட்டுப் போன விடயங்களுக்காக தேசிய கணக்காய்வு திணைக்களமும் மாகாண கணக்காய்வு திணைக்களமும் எம்மிடம் இப்போதும் விளக்கங்களை கோரி வருகிறன. அதனால் எதையும் சட்டப்படியே செய்து விட என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனது பதவிக்கு காலத்தில் நான் தவறிழைத்து சென்று விட்டேன் என்று எதிர்காலத்தில் என் மீது வரலாறு எழுதப்பட்டு விடக்கூடாது என்பதில் நான் மிகக் கவனமாக இருக்கிறேன்.
ஆனால் எதிரணி உறுப்பினர்களின் எதிர்பார்ப்பு என்னவென்றால் அவர்களுடைய தர்பாரை நடத்துவதற்கு நான் ஒத்துழைக்க வேண்டும் என்பதாகும். சட்டத்தை மீறிய செயல்களுக்கு நான் துணைபோக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் அவர்கள் என்னை எதிர்க்கின்றனர். அவர்களது பொறுப்பற்ற சிந்தனைக்கு என்னால் விட்டுக்கொடுப்பு செய்ய முடியாது. என்னைப்பொறுத்தளவில் சரியென்றால் சரிதான். பிழையென்றால் பிழைதான். ஒருபோதும் பிழைகளை சரியென்று சொல்வதற்கு முன்னிற்க மாட்டேன். இதுதான் இன்றைய முரண்பாடுகளுக்கு காரணமாகும்.
நான் யாப்பை மீறி சர்வதிகாரமாகவும் ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் நடப்பதாக எதிரணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அவ்வாறு நான் செயற்பட்டால் எனக்கெதிராக முறைப்பாடு செய்து நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு. வேண்டுமானால் நீதிமன்றம் சென்று எனக்கெதிராக தடையுத்தரவு பெற முடியும். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் என் மீது வீண் குற்றம்சுமத்தி மக்களை திசை திருப்ப முனைகின்றனர்.
ஒரு மாநகர சபையின் முதல்வர் என்பவர் அந்த சபையின் பிரதம நிறைவேற்றதிகாரியாவார் என்று மாநகர சபைகள் கட்டளைகள் சட்டத்தின் 14-3 ஆம் பிரிவில் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவ்வாறு சட்டத்தினால் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் எதனையும் நான் இன்னும் பயன்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. இந்த மாநகர சபையின் அனைத்து விடயங்கள் தொடர்பிலுமான அதிகாரம் சட்டத்தினால் எனக்கே வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் நான் அவ்வாறு செயற்படவில்லை.
இவை தவிர மாநகர சபைக்கு வர வேண்டிய நிலுவைகளை அறவிட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் எதிரணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுப்பில் உள்ளன. சம்மந்தப்பட்டவர்களுக்கு சட்டத்தரணி ஊடாக கடிதங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
சில எதிரணி உறுப்பினர்கள் தமது பகுதியில் சோலை வரி மற்றும் வர்த்தக உரிமைச் சான்றிதழ் கட்டணம் போன்றவற்றை மாநகர சபைக்கு செலுத்த வேண்டாம் என்று மக்களிடம் கூறிக்கொண்டு மறுபுறம் நிலுவையை அறவிடுமாறு கோருகின்றனர் என்றால் அவர்களது அரசியல் பின்னணி எந்தளவு கீழ்த்தரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக கல்முனை மாநகர சபைக்கு எந்த வரியும் செலுத்த வேண்டாம் என்று சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் அவ்வூர் மக்களிடம் கூறிக்கொண்டு- வரி செலுத்துவதை தடுத்து வருகின்றனர். இது எவ்வளவு சட்டவிரோதமான செயல் என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். சாய்ந்தமருத்துக்கான அனைத்து சேவைகளையும் கல்முனை மாநகர சபையே மேற்கொண்டு வருகின்ற நிலையில் வரி செலுத்துவதை தடுப்பது எந்த வகையில் நியாயம் என்று எண்ணிப்பாருங்கள்.
சாய்ந்தமருத்துவுக்கு தனியான நகர சபையொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற அபிலாஷைக்காகவே அம்மக்கள் பள்ளிவாசலின் வேண்டுகோளையேற்று இந்த சுயேட்சைக்குழுவினருக்கு வாக்களித்தனர். ஆனால் அவர்கள் தனிச்சபை பெறுவதற்கு முயற்சிக்கவுமில்லை, கல்முனை மாநகர சபை மூலம் சேவையாற்றவுமில்லை. சில அரசியல் கட்சி சார்ந்தவர்களுடன் இணைந்து கொண்டு மாநகர சபையை முடக்கும் கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு எப்படி தமது எதிர்கால அரசியலை வளர்த்துக் கொள்ளலாம் என்றே அவர்கள் சிந்திக்கிறார்கள். தனிச்சபைக்காக மக்கள் வழங்கிய ஆணையை மீறி, அந்த இலக்கில் இருந்து விலகி, தமது சுயநல அரசியல் பயணத்தை அவர்கள் மேற்கொண்டிருக்கின்றனர்.
எவ்வாறாயினும் சாய்ந்தமருத்துக்கான சேவைகளை நாமே முன்னெடுக்கின்றோம். இவர்கள் என்னதான் செய்தாலும் அந்த மக்களுக்கான சேவைகளை நாம் கைவிடப்போவதில்லை. இந்த சந்தர்ப்பத்தில் நான் அந்த உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் சாய்ந்தமருது மக்களுக்கு உண்மையாக இருந்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.
பொதுவாக எதிரணி உறுப்பினர்களினால் இதுவரை எந்தவொரு மக்கள் நலத்திட்டமோ மாநகர சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டமோ முன்வைக்கப்படவில்லை. நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் செலவீனங்களுக்கான கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்து வருகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் இருந்து அரசாங்கம் மாதாந்தம் வழங்குகின்ற இருபதாயிரம் ரூபாவுக்கு மேலதிகமாக அவர்களுடைய தொலைபேசி பாவனைக்கும் மக்கள் வரிப்பணத்தில் இருந்து மாநகர சபையில் ஐயாயிரம் ரூபா வீதம் பெற்றுக் கொள்கின்றனர்.
எமது மாநகர சபையில் நிதிப்பற்றாக்குறை இருப்பதை நான் மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை. அதனை நிவர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும் என்று தொடர்ந்தேச்சியாக வலியுறுத்தி வருகின்றேன்.
எதிரணி உறுப்பினர்கள் தமது கட்சி சார்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் ஊடாக பணத்தை கொண்டு வந்து அவரவர் பகுதிகளுக்கு அபிவிருத்தி பணிகளை செய்ய முடியும். அவ்வாறு நீங்கள் செய்ய முற்பட்டால் நான் உங்களுக்கு பக்கபலமாக இருந்து, அவற்றை நிறைவு செய்வதற்கு ஒத்துழைப்பேன் என்று கூறியிருக்கிறேன். ஆனால் இதுவரை ஒரு திட்டத்தை கூட அவர்களினால் கொண்டு வர முடியவில்லை. ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பது போல் தங்களது இயலாமையையும் பிழைகளையும் மறைப்பதற்காக என் மீதும் மாநகர சபை நிர்வாகத்தின் மீதும் அபாண்டங்களை சுமத்தி வருகின்றனர்.
இந்த உறுப்பினர்கள்தான் மக்களுக்கான எமது சேவைகளை தடுக்க முற்படுகின்றனர். அந்த சூழ்ச்சியின் வெளிப்பாடுதான் மாநகர சபையை முடக்க எடுக்கும் முயற்சியாகும். எதிரணி உறுப்பினர்கள் சபையின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் மிகவும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டு சபைக்கூட்டங்களை குழப்புவது மாத்திரமன்றி சபை அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் எச்சரித்து, அடிபணிய வைக்க முற்பட்டுள்ளனர்.
முதல்வரினால் சபைக்கூட்டம் முடிவுறுத்தப்பட்ட பின்னர் சபா மண்டபத்தில் வேறு எவரும் எந்த நிகழ்வையும் நடத்துவது சட்டவிரோதமாகும். அது அந்த மேண்மைமிகு சபையை அவமதிக்கும் செயலாகும். அதனை நான் பார்த்துக் கொண்டிருந்திருக்க வேண்டுமா? அதனால்தான் கடந்த கூட்ட நிறைவின் பின்னர் சபையில் குழப்பம் விளைவித்த உறுப்பினர்களை வெளியேற்றுவதற்காக பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் என்னிடம் கேட்டிருந்தால் என்னைப்பற்றி விமர்சிப்பதற்கான பத்திரிகையாளர் மாநாட்டை நடத்துவதற்கு நானே சபா மண்டபம் தவிர்ந்த வேறொரு இடத்தை கொடுத்திருப்பேன். ஆனால் தாம் அங்கம் வகிக்கின்ற சபையின் கண்ணியத்தை தாமே பாழ்படுத்தும் வகையில் நடந்து விட்டனர். அந்தளவுக்கு சபை தொடர்பிலான அறிவு வறுமையில் அவர்கள் இருக்கின்றனர்.
இனிவரும் காலங்களில் சபையில் ஒழுக்கத்தை மீறி நடக்கும் உறுப்பினர்கள் மீது கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். இதன் நிமித்தம் அவர்களை சபையில் இருந்து குறைந்தது ஒரு மாத காலம் இடைநிறுத்துவேன். சிலவேளை அது மூன்று மாதங்கள் வரை நீடிக்கப்பட்டு, அவர்களது உறுப்புரிமை கூட பறிபோகும் நிலையும் ஏற்படலாம். எந்த உறுப்பினராயினும் சபைக்கு மரியாதை செய்தாக வேண்டும். எமது மாநகர சபைக்கு தரம் தெரியாமல் நடக்கின்ற உறுப்பினர்களும் வந்திருப்பதை நினைத்து வெட்கித் தலைகுனிகின்றேன்.
சபையில் கதிரைகளை உடைத்து ரகளை செய்யும் உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் இனிவரும் காலங்களில் எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை என்பதுடன் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அறியத்தருகின்றேன்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ மாகாண சபை உறுப்பினர்களுக்கோ இருக்கின்ற 'சிறப்புரிமை' உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு கிடையாது. சபையில் பேசுவதற்கான சிறப்புரிமை கூட இல்லை. அவ்வாறு தமக்கு ஏதும் சிறப்புரிமை இருக்கிறது என நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அது உங்களது அறிவீனமாகும் என்பதை எமது மாநகர சபை உறுப்பினர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
அதனால் சபையில் ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள். சபையில் பேசும்போது எவரையும் மானபங்கப்படுத்தாதீர்கள். அவ்வாறு முறையற்ற விதத்தில் பேசி, யாராவது பாதிக்கப்பட்டால் உங்கள் மீது மான நஷ்டஈடு வழக்கு தொடர சம்மந்தப்பட்டவருக்கு உரிமை உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். சட்டத்தை தெரிந்து கொள்ளாமல் தாம் நினைத்தபடி நடப்பதற்கு முற்படாதீர்கள்.
மாநகர சபையை முடக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் நான் அனுமதிக்க மாட்டேன். அவற்றை சட்ட வரம்புக்குள் நின்று முறியடிப்பேன் என்று உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். எதிரணி உறுப்பினர்கள் என்னுடன் எப்படி முரண்பட்டாலும் மக்களுக்கு நேர்மையாக இருக்க விரும்புகின்றேன். மக்களுக்காக என்றும் பொறுப்புக்கூற தயாராக இருக்கிறேன். தமது சுய அரசியல் இலாபங்களுக்காக தான்தோன்றித்தனமாக செயற்படுகின்ற உறுப்பினர்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் கிடையாது என நான் கருதுகின்றேன். இவர்களது சித்து விளையாட்டுக்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
மக்களுக்கு எம்மால் எந்த அபிவிருத்தியும் நடந்து விடக்கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருக்கின்றனர். அதனால் எவ்வித அடிப்படையுமில்லாமல் எம்மீது அபாண்டனங்களை சுமத்திக் கொண்டு, மக்களுக்கு அநியாயம் இழைக்கின்றனர் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்" என தனது நீண்ட உரையில் முதல்வர் றகீப் குறிப்பிட்டார்.
எமது ஒவ்வொரு சொல், செயல் பற்றியும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனி நபர்களினாலும் பொது அமைப்புகளினாலும் கேள்வி எழுப்பப்படுகிறது. எப்போதோ யாரோ செய்து விட்டுப் போன விடயங்களுக்காக தேசிய கணக்காய்வு திணைக்களமும் மாகாண கணக்காய்வு திணைக்களமும் எம்மிடம் இப்போதும் விளக்கங்களை கோரி வருகிறன. அதனால் எதையும் சட்டப்படியே செய்து விட என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனது பதவிக்கு காலத்தில் நான் தவறிழைத்து சென்று விட்டேன் என்று எதிர்காலத்தில் என் மீது வரலாறு எழுதப்பட்டு விடக்கூடாது என்பதில் நான் மிகக் கவனமாக இருக்கிறேன்.
ஆனால் எதிரணி உறுப்பினர்களின் எதிர்பார்ப்பு என்னவென்றால் அவர்களுடைய தர்பாரை நடத்துவதற்கு நான் ஒத்துழைக்க வேண்டும் என்பதாகும். சட்டத்தை மீறிய செயல்களுக்கு நான் துணைபோக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் அவர்கள் என்னை எதிர்க்கின்றனர். அவர்களது பொறுப்பற்ற சிந்தனைக்கு என்னால் விட்டுக்கொடுப்பு செய்ய முடியாது. என்னைப்பொறுத்தளவில் சரியென்றால் சரிதான். பிழையென்றால் பிழைதான். ஒருபோதும் பிழைகளை சரியென்று சொல்வதற்கு முன்னிற்க மாட்டேன். இதுதான் இன்றைய முரண்பாடுகளுக்கு காரணமாகும்.
நான் யாப்பை மீறி சர்வதிகாரமாகவும் ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் நடப்பதாக எதிரணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அவ்வாறு நான் செயற்பட்டால் எனக்கெதிராக முறைப்பாடு செய்து நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு. வேண்டுமானால் நீதிமன்றம் சென்று எனக்கெதிராக தடையுத்தரவு பெற முடியும். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் என் மீது வீண் குற்றம்சுமத்தி மக்களை திசை திருப்ப முனைகின்றனர்.
ஒரு மாநகர சபையின் முதல்வர் என்பவர் அந்த சபையின் பிரதம நிறைவேற்றதிகாரியாவார் என்று மாநகர சபைகள் கட்டளைகள் சட்டத்தின் 14-3 ஆம் பிரிவில் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவ்வாறு சட்டத்தினால் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் எதனையும் நான் இன்னும் பயன்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. இந்த மாநகர சபையின் அனைத்து விடயங்கள் தொடர்பிலுமான அதிகாரம் சட்டத்தினால் எனக்கே வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் நான் அவ்வாறு செயற்படவில்லை.
இவை தவிர மாநகர சபைக்கு வர வேண்டிய நிலுவைகளை அறவிட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் எதிரணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுப்பில் உள்ளன. சம்மந்தப்பட்டவர்களுக்கு சட்டத்தரணி ஊடாக கடிதங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
சில எதிரணி உறுப்பினர்கள் தமது பகுதியில் சோலை வரி மற்றும் வர்த்தக உரிமைச் சான்றிதழ் கட்டணம் போன்றவற்றை மாநகர சபைக்கு செலுத்த வேண்டாம் என்று மக்களிடம் கூறிக்கொண்டு மறுபுறம் நிலுவையை அறவிடுமாறு கோருகின்றனர் என்றால் அவர்களது அரசியல் பின்னணி எந்தளவு கீழ்த்தரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக கல்முனை மாநகர சபைக்கு எந்த வரியும் செலுத்த வேண்டாம் என்று சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் அவ்வூர் மக்களிடம் கூறிக்கொண்டு- வரி செலுத்துவதை தடுத்து வருகின்றனர். இது எவ்வளவு சட்டவிரோதமான செயல் என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். சாய்ந்தமருத்துக்கான அனைத்து சேவைகளையும் கல்முனை மாநகர சபையே மேற்கொண்டு வருகின்ற நிலையில் வரி செலுத்துவதை தடுப்பது எந்த வகையில் நியாயம் என்று எண்ணிப்பாருங்கள்.
சாய்ந்தமருத்துவுக்கு தனியான நகர சபையொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற அபிலாஷைக்காகவே அம்மக்கள் பள்ளிவாசலின் வேண்டுகோளையேற்று இந்த சுயேட்சைக்குழுவினருக்கு வாக்களித்தனர். ஆனால் அவர்கள் தனிச்சபை பெறுவதற்கு முயற்சிக்கவுமில்லை, கல்முனை மாநகர சபை மூலம் சேவையாற்றவுமில்லை. சில அரசியல் கட்சி சார்ந்தவர்களுடன் இணைந்து கொண்டு மாநகர சபையை முடக்கும் கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு எப்படி தமது எதிர்கால அரசியலை வளர்த்துக் கொள்ளலாம் என்றே அவர்கள் சிந்திக்கிறார்கள். தனிச்சபைக்காக மக்கள் வழங்கிய ஆணையை மீறி, அந்த இலக்கில் இருந்து விலகி, தமது சுயநல அரசியல் பயணத்தை அவர்கள் மேற்கொண்டிருக்கின்றனர்.
எவ்வாறாயினும் சாய்ந்தமருத்துக்கான சேவைகளை நாமே முன்னெடுக்கின்றோம். இவர்கள் என்னதான் செய்தாலும் அந்த மக்களுக்கான சேவைகளை நாம் கைவிடப்போவதில்லை. இந்த சந்தர்ப்பத்தில் நான் அந்த உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் சாய்ந்தமருது மக்களுக்கு உண்மையாக இருந்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.
பொதுவாக எதிரணி உறுப்பினர்களினால் இதுவரை எந்தவொரு மக்கள் நலத்திட்டமோ மாநகர சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டமோ முன்வைக்கப்படவில்லை. நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் செலவீனங்களுக்கான கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்து வருகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் இருந்து அரசாங்கம் மாதாந்தம் வழங்குகின்ற இருபதாயிரம் ரூபாவுக்கு மேலதிகமாக அவர்களுடைய தொலைபேசி பாவனைக்கும் மக்கள் வரிப்பணத்தில் இருந்து மாநகர சபையில் ஐயாயிரம் ரூபா வீதம் பெற்றுக் கொள்கின்றனர்.
எமது மாநகர சபையில் நிதிப்பற்றாக்குறை இருப்பதை நான் மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை. அதனை நிவர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும் என்று தொடர்ந்தேச்சியாக வலியுறுத்தி வருகின்றேன்.
எதிரணி உறுப்பினர்கள் தமது கட்சி சார்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் ஊடாக பணத்தை கொண்டு வந்து அவரவர் பகுதிகளுக்கு அபிவிருத்தி பணிகளை செய்ய முடியும். அவ்வாறு நீங்கள் செய்ய முற்பட்டால் நான் உங்களுக்கு பக்கபலமாக இருந்து, அவற்றை நிறைவு செய்வதற்கு ஒத்துழைப்பேன் என்று கூறியிருக்கிறேன். ஆனால் இதுவரை ஒரு திட்டத்தை கூட அவர்களினால் கொண்டு வர முடியவில்லை. ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பது போல் தங்களது இயலாமையையும் பிழைகளையும் மறைப்பதற்காக என் மீதும் மாநகர சபை நிர்வாகத்தின் மீதும் அபாண்டங்களை சுமத்தி வருகின்றனர்.
இந்த உறுப்பினர்கள்தான் மக்களுக்கான எமது சேவைகளை தடுக்க முற்படுகின்றனர். அந்த சூழ்ச்சியின் வெளிப்பாடுதான் மாநகர சபையை முடக்க எடுக்கும் முயற்சியாகும். எதிரணி உறுப்பினர்கள் சபையின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் மிகவும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டு சபைக்கூட்டங்களை குழப்புவது மாத்திரமன்றி சபை அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் எச்சரித்து, அடிபணிய வைக்க முற்பட்டுள்ளனர்.
முதல்வரினால் சபைக்கூட்டம் முடிவுறுத்தப்பட்ட பின்னர் சபா மண்டபத்தில் வேறு எவரும் எந்த நிகழ்வையும் நடத்துவது சட்டவிரோதமாகும். அது அந்த மேண்மைமிகு சபையை அவமதிக்கும் செயலாகும். அதனை நான் பார்த்துக் கொண்டிருந்திருக்க வேண்டுமா? அதனால்தான் கடந்த கூட்ட நிறைவின் பின்னர் சபையில் குழப்பம் விளைவித்த உறுப்பினர்களை வெளியேற்றுவதற்காக பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் என்னிடம் கேட்டிருந்தால் என்னைப்பற்றி விமர்சிப்பதற்கான பத்திரிகையாளர் மாநாட்டை நடத்துவதற்கு நானே சபா மண்டபம் தவிர்ந்த வேறொரு இடத்தை கொடுத்திருப்பேன். ஆனால் தாம் அங்கம் வகிக்கின்ற சபையின் கண்ணியத்தை தாமே பாழ்படுத்தும் வகையில் நடந்து விட்டனர். அந்தளவுக்கு சபை தொடர்பிலான அறிவு வறுமையில் அவர்கள் இருக்கின்றனர்.
இனிவரும் காலங்களில் சபையில் ஒழுக்கத்தை மீறி நடக்கும் உறுப்பினர்கள் மீது கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். இதன் நிமித்தம் அவர்களை சபையில் இருந்து குறைந்தது ஒரு மாத காலம் இடைநிறுத்துவேன். சிலவேளை அது மூன்று மாதங்கள் வரை நீடிக்கப்பட்டு, அவர்களது உறுப்புரிமை கூட பறிபோகும் நிலையும் ஏற்படலாம். எந்த உறுப்பினராயினும் சபைக்கு மரியாதை செய்தாக வேண்டும். எமது மாநகர சபைக்கு தரம் தெரியாமல் நடக்கின்ற உறுப்பினர்களும் வந்திருப்பதை நினைத்து வெட்கித் தலைகுனிகின்றேன்.
சபையில் கதிரைகளை உடைத்து ரகளை செய்யும் உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் இனிவரும் காலங்களில் எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை என்பதுடன் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அறியத்தருகின்றேன்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ மாகாண சபை உறுப்பினர்களுக்கோ இருக்கின்ற 'சிறப்புரிமை' உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு கிடையாது. சபையில் பேசுவதற்கான சிறப்புரிமை கூட இல்லை. அவ்வாறு தமக்கு ஏதும் சிறப்புரிமை இருக்கிறது என நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அது உங்களது அறிவீனமாகும் என்பதை எமது மாநகர சபை உறுப்பினர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
அதனால் சபையில் ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள். சபையில் பேசும்போது எவரையும் மானபங்கப்படுத்தாதீர்கள். அவ்வாறு முறையற்ற விதத்தில் பேசி, யாராவது பாதிக்கப்பட்டால் உங்கள் மீது மான நஷ்டஈடு வழக்கு தொடர சம்மந்தப்பட்டவருக்கு உரிமை உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். சட்டத்தை தெரிந்து கொள்ளாமல் தாம் நினைத்தபடி நடப்பதற்கு முற்படாதீர்கள்.
மாநகர சபையை முடக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் நான் அனுமதிக்க மாட்டேன். அவற்றை சட்ட வரம்புக்குள் நின்று முறியடிப்பேன் என்று உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். எதிரணி உறுப்பினர்கள் என்னுடன் எப்படி முரண்பட்டாலும் மக்களுக்கு நேர்மையாக இருக்க விரும்புகின்றேன். மக்களுக்காக என்றும் பொறுப்புக்கூற தயாராக இருக்கிறேன். தமது சுய அரசியல் இலாபங்களுக்காக தான்தோன்றித்தனமாக செயற்படுகின்ற உறுப்பினர்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் கிடையாது என நான் கருதுகின்றேன். இவர்களது சித்து விளையாட்டுக்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
மக்களுக்கு எம்மால் எந்த அபிவிருத்தியும் நடந்து விடக்கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருக்கின்றனர். அதனால் எவ்வித அடிப்படையுமில்லாமல் எம்மீது அபாண்டனங்களை சுமத்திக் கொண்டு, மக்களுக்கு அநியாயம் இழைக்கின்றனர் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்" என தனது நீண்ட உரையில் முதல்வர் றகீப் குறிப்பிட்டார்.