சாய்ந்தமருது கோட்ட மட்டத்தை பொருத்த மட்டில் கடந்த காலங்களை விட இம்முறை சாய்ந்தமருதில் ஏற்பட்டுள்ள கல்வி புரட்சி அடைவு மற்றம் அதற்காக முன்னெடுத்து வருகின்ற அா்பணிப்பு சிறந்த முன்னேற்றத்தை காணக்கூடிதாக இருக்கின்றது. என கல்முனை வலயக் கல்விப் பணி்ப்பாளர் எம். எஸ் ஐலில் தெரிவித்தார்.
சாய்ந்தமருது றியாலுல் ஐன்னா வித்தியாலத்தின் அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே மேற் கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கூறுகையில் இக் கோட்டத்திலுள்ள அதிபர்களும் ஆசிரியர்களும் தங்களது பாடசாலைகளை முன்னேற்ற வேண்டும் என்பதில் மிகவும் அர்பனிப்புடன் பாடுபடுகின்றனர் அந்தவகையில் சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலத்தின் அதிபர் எம்.ஐ. சம்சுதீன் இப்பாடசாலையை பாரமெடுத்த பின்னர் இப்பிரதேசத்தில் மாணவர்களின் கல்வி மட்டத்தின் அடைவு மட்டத்தை கூட்டுவதிலும் சிறந்த முன்னேற்றத்திலும் ஒழுக்கத்திலும் முன்மாதிரியாகவும், மிகவும் அர்பணிப்புடனும் இரவு பகல் பாராது அவரது ஆசிரிய குலாத்துடன் சேர்ந்து பாடுபடுகின்றர் அதன் விளைவுதான் இம்முறை 5ம் தர புலமைப்பரீட்சையில் தோற்றிய 23 மாணவர்களில் ஒருபரைத் தவிர ஏனைய 22பேரும் சித்தியடைந்திருக்கின்றார்கள் என்பது பாரிய வெற்றியாகும் அதற்காக அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் வலயக் கல்வி அதிகாரி என்றவகையில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேற்படி கருத்துத் தெரிவித்த வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலில் குறிப்பாக இவ்வலயத்தில் பெரிய பாடசாலைகள் செய்திடாத பரிசளிப்பு விழாக்களைச் செய்து மாணவர்களை ஊக்குவிப்பதில் இப்பாடசாலை அர்பணிப்புடன் சேவைசெய்து வருகின்றது என்பதில் எவ்வித இரண்டாம் கருத்துக்குமிடமில்லை. இன்னும் சிறந்த பெருபேர்களை அடைவதற்கு இன்னும் முன்னேற்றமடைய வாய்ப்பு இருக்கின்றது இதனை பாதுகாக்க வேண்டிய கவணத்திலும் ஈடுபடவேண்டும் இன்னும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டல் இருக்கின்ற போது மாணவர்களின் முன்னேற்றத்தையும் அடைவு மட்டத்தையும் கூட்டக் கூடிய வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது. பல்வேறு வகையான வழங்களை நாம் பெற்றிருக்கின்ற பொழுது அதனை விணைத்திறன் மிக்க செயற்பாடுகளுடன் பரீட்சைகளுக்கு மாணவர்களை தோற்றுவிக்கப் படுகின்றபோது நிச்சயமாக மாணவர்கள் சிறந்த பெருபேர்களை அடைவர்கள் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. இதற்கு பெற்றோர்களும் அர்பணிப்புடன் செயல் படுவார்களே ஆனால் எதிர்காலத்தில் சிறப்பாக கல்வி மட்டத்தை கூட்ட முடியும்.
இன்று சர்வதேச ரீதியாக வளா்ச்சி அடைந்து வருகின்ற நவின தொழிநுட்பங்களுடைய பயன்பாடுகளுக்கு எங்களுடைய மாணவா்களை உற்படுத்தி அவர்களது நலங்களை பெற்றுக் கொடுக்கூடிய அவசியமும் காணப்படுகின்றது. உண்மையாக நவின தொழிநுட்பத்தின் மூலமாக எங்களுக்கு அறிமுகப்படுத்துகின்ற பல்வேறு வகையான உபகரணங்களை சிறப்பாக கையாளக் கூடியவர்களாகவும் அவற்றை பயன்படுத்தி அவர்களுடைய கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்ளக் கூடிய வகையில் கையாளக்கூடிய மாணவர்களாக உருவாக்குவமே ஆனால் மாணவர்களின் முன்னேற்றதை கூட்டமுடியும்
ஆனால் இந்த நவின தொழிநுட்பத்தினால் எங்களுடைய மாணவா்களின் சிந்தனைகள், எண்ணங்கள் ஒரு வேளை வழிகெடுத்துவிடுமோ என்கின்ற பயமும் எம்மிடத்திலே காணப்படுகின்றது. மாறாக இந்த நவின தொழிநுட்பத்தினால் மாணவர்களின் சிந்தனைகளை கூட்டக் கூடியதாகவும் அதன் மூலம் சிறந்த பயன்பாட்டினை எட்டக் கூடிய வாய்ப்பும் அதிகமாக் காணப்படுகின்றது. பல்வேறு கல்வி வளர்ச்சியில் முன்னேறி வருகின்ற நாடுகளை பார்க்கின்ற போது நவின தொழிநுட்ப சாதனங்களை பயன்படுத்தி நவின கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதில் ஒரு உதாரணத்தை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் ஒரு மாணவன் சுகயீனம் காரணமாக பாடசாலைக்கு செல்ல முடியாமல் இருந்தால் அன்று பாடசலையின் வகுப்பறையில் நடைறெ்ற நிகழ்வுகளை, பாடங்களை அறிய முடியாமல் இருந்திருக்கும் மாறாக நவின தொழிநுட்பத்தில் முன்னேறி வருகின்ற நாடுகளைப் பொருத்த மட்டில் மாணவன் பாடசாலையின் வகுப்பறையில் நடைபெற்ற பாடங்களை வீட்டிலிருந்தவாறே கற்பித்தல் செயற்பாடுகள் அனைத்தையும் கற்கக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற மொபையில் போன் மூலம் கூட கல்வி கற்கின்ற ஒரு சாதணமாக பயன்படுத்துவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. ஆனால் நாம் மாணவர்கள் இம் மொபையில் போனை பயன்படுத்தினால் மாணவனுடைய கல்வி கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்து விடுமோ எண்கின்ற பயம் காணப்படுகின்றது நாம் அவா்களுக்கு மொபையில் போன் மூலமாக சிறந்த செயற்பாடுகளை பயன்படுத்த முடியும் என்கின்ற வழிகாட்டலை காட்ட வேண்டும். அதே நேரம் மொபையில் போனில் எமக்கு தெரியாத விடயங்களைக் கூட அவர்களால் செயற்படுத்தக் கூடியதை நாம் காணமுடிகின்றது மாறாக மொபையில் போன்பக்கம் செல்ல விடாமல் கட்டுப்படுத்துகின்ற போது, தடைசெய்கின்ற போது அவர்களுடைய அறிவு மட்டம் குறைந்து செல்வதையும் மாணவர்கள் பிழையான விடயத்தில் செயற்படுத்துவதைக் நம் கண்முன்னே காணக்கூடியதாக இருக்கின்றது.
அதனை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்குறிய வழிமுறைகளை காட்ட வேண்டும் அவர்கள் அதனை பயன்படுத்தி தங்களது அறிவுகளை விருத்தி செய்வதில் வளர்த்துக் கொள்ளக் கூடியவா்களாக நாம் பயிற்றுவிக்க வேண்டும் மாறாக அந்தக் காலத்தில் கரும்பலகையில் வெண்கட்டிகளை பயன்படுத்தி செயற்பட்ட காலத்திற்கு மாணவர்களை கொண்றுபோய் சேர்த்துவிடும் நவின தொழிநுட்பத்தை பயன்படுத்துவத்தி அவ்வாறான வழிகாட்டலை செய்கின்ற போதுதான் எதிர்காலத்தில் சா்வதேச ரீதியாக வருகின்ற சவால்களுக்கு எதிர்கொள்கின்ற ஏனைய மாணவர்களோடு போட்டியிடுகின்ற மாணவர்களாக அவர்களை மாற்றமுடியும், நவின சிந்தனைகளை, நவின கண்டுபிடிப்புகளுடைய சிந்தனைகள் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டுமென்பதற்காக இன்று பல பாடசாலைகளில் அதற்கான வழிமுறைகளை மாணவர்களுக்கு அரசாங்கம் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றனர்.
அவ்வாறன ஏற்பாடுகளை நாங்கள் செய்து கொடுக்க வில்லையானால் எதிர்காலத்தில அந்த மாணவர்களோடு போட்டியிட முடியாதவர்களாக இவர்கள் மாறிவிடக் கூடிய நிலைமைகள் காணப்படும்.
எனவே அவ்வாறான இந்த மாணவர்களுடைய அறிவை குறைத்து விடுகின்ற ஒரு செயற்பாட்டினை நாங்கள் செய்து விடக்கூடாது. அவர்களுடைய ஆற்றல்களுக்கும், திறமைகளுக்கும் எற்றவகையிலே புதிது புதிதாக விஞ்ஞான கண்டு பிடிப்புகனை சிறப்பாக பயன்படுத்தி செல்லக்கூடிய மாணவ சமூகமாக உருவாக்க முடியவில்லை என்றால் நிச்சயமாக இவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடக் கூடிய நிலைமைகள் காணக்கூடியதாக இருக்கும். கணணியினையும், மொபையில் போன்களை பயன்படுத்துவதற்கு தடுப்பமாகயிருந்தால் அதனோடு தொடர்புடை முக நூல்களையும், வட்சப் போன்றவைகளை பார்த்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றோம்.
ஆனால் அவற்றிலுள்ள நல்ல விடயங்களை மாணவர்களின் அறிவை கூட்டுவதற்கும், அதிகரிப்பதற்கும் உதவக் கூடிய விடங்களை அவர்களுக்கு வழிகாட்டுவதை தவறி விடுகின்றோம். அவற்றை பிழையானவையாக, சமூகத்தை கெடுத்துவிடக் கூடியதாக நாங்கள் சிந்திக்கின்றோம். அவற்றை பாவிப்பதை விட்டும் மாணவர்களை தடுக்கின்றோம். எங்களுடைய சிந்தனைகள் சரியாக இருக்குமாக இருந்தால், நாங்கள் சிந்திக்கின்றவைகள் நல்லவையாக இருக்குமாக இருந்தால் நிச்சயமாக நல்ல வழிமுறைகளை எங்களுடைய மாணவர்களுக்கு காட்டக் கூடியதாக இருக்கும்.
மாணவர்களை நவின கண்டுபிடிப்புகளுக்கும், நவின தொழிநுட்ப முறைகளுக்கும் மாற்றப்படவில்லை என்றால் இது மற்றவர்களோடு மாணவ சமூகத்தை உருவாக்கிய பாவத்தை செய்தவர்களாக மாறிவிடுவோம்
எனவே எமது மாணவ செல்வங்களை மிகவும் சிறப்பாக எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடியவர்களாக சிறந்த முறையில் நாம் வழிகாட்டவேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என்று கூறினார்.