ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் கையளிப்பு ..

ஹுதா உமர்-

கா
ஸ்மீரில் வாழும் மக்களின் வாழ்வில் நிம்மதி உண்டாக வேண்டும், அதற்காக ஐக்கிய நாடுகள் நேரடியாக தலையிட்டு அந்த மக்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர முன்வர வேண்டும் எனும் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று அண்மையில் காஸ்மீர் மாணவர் பேரவையினரால் ஐக்கிய சபை நாடுகளின் இலங்கைக்கான காரியாலயத்தில் வைத்து ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலக அதிகாரிகளிடம் காஸ்மீர் மாணவர் பேரவையின் சிரேஷ்ட ஆலோசகரும்,சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நல்லிணக்க தூதுவருமான கலாநிதி அன்வர் எம் முஸ்தபா அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

காஸ்மீரில் தினமும் இடம்பெறும் கொடுமைகளில் இருந்து அந்த மக்களையும்,அங்கு கொடுமைகளுக்கு ஆளாகும் சிறுவர்கள்,பெண்களையும் உடனடியாக மீட்டு சுதந்திரமான காற்றை அந்த மக்களும் சுவாசிக்க வழிசமைக்க வேண்டியது மானிடத்தை நேசிக்கும் மனித நேயர்களின் பண்பாகும் எனவும் உலக சமாதானத்தை உண்டாக்க வேண்டிய ஐக்கிய நாடுகள் சபை இந்த விடயத்தில் கரிசனையுடன் செயலாற்ற வேண்டும் எனவும் அந்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் காஸ்மீர் மாணவர் பேரவை மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு காஸ்மீரில் பல பக்க துன்பங்களிலும் வாடும் எமது மக்களின் பிரச்சினைகளை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனும் சுலோகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பேரணியும் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -