க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான சாதாரண தகவல் தொழில்நுட்ப பரீட்சையை இணையத்தளம் மூலமாக நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.
இப்பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது வரைக் காலமும், வினாத்தள்களின் ஊடாகவே இந்தப் பரீட்சை நடைப்பெற்றது. ஆனால் எதிர்காலத்தில் கணினி நிலையங்களில் இந்தப் பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் கல்வி ஆண்டைச் சேர்ந்தவர்களுக்காக இந்தப் பரீட்சை ஜனவரி மாதத்தில் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், இந்தப் பரீட்சைக்காக தேசிய தொழில்பயிற்சி கற்கைக்கான சான்றிதழை பெற்றுக்கொடுக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -