சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடு செய்ய நடவடிக்கை!


ட்டளைகள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளை சபாநாயகர் செய்கின்றார் என, பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளரிடமும் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடமும் முறையிட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கட்டளைகள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளை சபாநாயகர் மேற்கொள்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி முதலான கட்சிகளுக்கு ஆதரவாக அவர் செயற்படுகின்றார்.
எனவே, சபாநாயகரின் பக்கச்சார்பான, சட்டவிரோத நடவடிக்கை குறித்து தூதரக காரியாலயங்களுக்கும் விளக்கமளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மற்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோர் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -