கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட தி/கி/ காக்கமுனை அரசினர் கலவன் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி சுத்தாமான குடி நீரை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்ய சமூக ஆர்வளர் ஏக்கூப் பைஸல் ஆசிரியர் விடுத்த வேண்டு கோளுக்கு இணங்க அல் ஹிக்மதுல் உம்மாஹ் நிறுவனத்தின் பணிப்பாளர் பாதிஹ் ஹஸ்ஸாலி அவர்களினால் குடிநீர் டெப் (குடிநீர் தளம் ) நிர்மாணிக்கப்பட்டு நிறுவனத்தின் ஆலோசகர் எம்.எம்.ரியாஸ் அவர்களினால் 2018.11.23 ஆம் திகதி இன்று குடி நீர் தளம் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களின் சுத்தமான குடி நீரினை பெறும் நோக்கில் இக் குடி நீர் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு பாடசாலை அதிபர் எம்,ஏ.ஐயூப்கான் தலைமையில் இடம்பெற்றதுடன், பிரதி அதிபர் எம்.ஏ.எம்.ஆஸாத் ஆசரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .