கல்முனையில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நடைப்பவனி நேற்று முன்தினம் (14)புதன்கிழமை பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் சா.இராஜேந்திரனின் வழிகாட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையும்
பாண்டிருப்பு கென்ரனியல் ஸ்ரார்ஸ் லயன்ஸ் கழகமும் இணைந்து நடாத்திய விழிப்புணர்வு எழிச்சி நடைப்பவனி நேற்று முன்தினம் 14 ஆம் திகதி புதன் கிழமை நடைபெற்றது. நீரிழிவு நோய் தொடர்பான பலவித சுலோக அட்டைகள் கொண்டுசெல்லப்பட்டன.
'குடும்பமும் நீரிழிவும்' எனும் தொனிப்பபொருளில் நடைபெற்ற இந்த
நடைப்பவனியில் வைத்தியநிபுணர்கள் வைத்திய அதிகாரிகள்
தாதியஉத்தியோகத்தர்கள் லயன்ஸ்கழக உறுப்பினர்கள் பொதுமக்கள்
எனபலதரப்பட்டவர்களும் கலந்கொண்டனர்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இருந்து ஆரம்பமான நடைபவனி நகர்சென்று திரும்பியது.