இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் ஏழாவது வருடாந்த விஞ்ஞான ஆராய்ச்சி அமர்வு, பீடாதிபதி கலாநிதி யூ.எல்.செய்னுடீன் தலைமையில் 2018-11-15 ஆம் திகதி பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கலாநிதி கே.கோமதிராஜின் வழிநடத்தலில் இடம்பெற்ற இன்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் கலந்துகொண்டதுடன் விஷேட பேச்சாளராக அடிப்படை கற்கைகள் நிறுவனத்தின் ஆராய்ச்சி பேராசிரியர் சாவித்ரி குமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.
“ஒன்றிணைக்கப்பட்ட அபிவிருத்திக்கான பல்துறை விஞ்ஞான ஆராய்ச்சி எனும் தொனிப்பொருளில்” இடம்பெற்ற குறித்த ஆராய்ச்சி அமர்வில் 39 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாத்திக்கப்பட்டன.