கல்முனையில் புளு ஸ்கை கெம்பஸின் (BLUE SKY CAMPUS) அங்குரார்ப்பணவைபவமும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று(19) திங்கட்கிழமை மாலை 4.50 மணிக்கு நடைபெறும்.
கல்முனை கிறிஸ்ரா இல்லத்தில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக வலயக்கல்விப்பணிப்பாளர்களான திருமதி என்.புள்ளநாயகம் (திருக்கோவில்) எம்.எஸ்.அப்துல்ஜலீல்(கல்முனை) ஆர்.சுகிர்தராஜன்(பட்டிருப்பு) எம்.எஸ்.சஹ¬-_துல்நஜீம்(சம்மாந்துறை) மற்றும் உதவிக்கல்விப்பணிப்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்கள்.
மேலும் 12 அதிபர்கள் கௌரவ அதிதிகளாக அழைக்கப்பட்டுள்ளனர்.
திறந்த பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கே.ஞானரெத்தினம் 'சகலருக்கும் கல்வி' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார்.