மருதமுனை-
இலங்கை முஸ்லீம் அரசியல் வரலாற்றில் மறைந்த தலைவர் அஸ்ரபிற்கு பின்னர் அரசியல் புரட்சியை ஏற்படுத்திய ஒரு தலைமைத்துவமாக திகழ்வது அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதுர்தீனாகும்.முஸ்லீம் சமூகத்தின் எதிர்கால நலனை நோக்கிய அவரது ஒவ்வொரு தீர்மானங்களும் காலத்திற்கு ஏற்றவைகளாகவே அமையும் என்பதில் இரண்டாம் பட்ச கருத்து இருக்க முடியாது.
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் ஸ்திரமற்றதன்மைக்கு பிரதான காரணமாக கூறப்படுவது அரசியலைமைப்பு சட்டத்தையும்,நிறைவேற்று அதிகாரத்தையும் தங்களுக்கு ஏற்றவகையில் ஆட்சியாளர்கள் பயன்படுத்திக் கொண்டதாகும்.இச் செயற்பாடானாது ஜனநாயகத்திற்கு முற்றிலும் முறணானது எனும் காரணத்திற்காகவே அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் தலைவர் நீதீமன்றம் வரை சென்று போராடினார்.இது ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்கான சிறுபான்மை கட்சி ஒன்றின் வகிபாகமாகும்.
எமது நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கபட வேண்டும்,நாட்டின் ஆட்சியாளர்கள் நினைத்தாற் போல்
அரசியலைமைப்பு சட்டத்தையும்,நிறைவேற்று அதிகாரத்தையும் தங்கள் பக்கம் வசைத்து ஜனநாயக அத்து மீறல்களில் ஈடுபட இடமளிக்க கூடாது என்ற உன்னத எண்ணத்தினை கொண்டே இன்றுவரை அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் தலைவர் செயற்பட்டு வருகிறார்.ஆனால் அதனை தவறாக சிலர் சித்தரிக்கின்றனர்.
அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் கொள்கைகள் என்றும் மாற்றமடைய போவதில்லை.முஸ்லீம் சமூகத்தின் எதிர்கால அரசியல் முகவரியாக திகழ போவது அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியாகத் தான் இருக்கும்.ஜனநாயகத்தை நிலை நிறுத்த சிறுபான்மை கட்சிகளுடன் ஒன்றினைந்து போராடுவதை கறுப்பு கண்ணாடிகளை அணிந்து பார்த்தால் அதன் பார்வை கோணலாகவே இருக்கும்.
அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சிக்கு இலங்கை முஸ்லீம் அரசியல் வரலாற்றில் தனித்துவமான ஒரு இடமுண்டு.அதனை ஒரு போதும் கட்சியும்,கட்சி தலைமையும் விட்டுக் கொடுக்க போவதில்லை.முஸ்லீம் சமூகம் அரசியல் ரீதியாக பாதுகாக்கபட வேண்டும் என்ற சிந்தனை மாத்திரமே அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் தலைவரிற்கு உள்ளதே தவிர பெரும்பான்மை கட்சிகளின் சுக போகங்களுக்கு அல்ல என்பதை இன்றைய போராட்டம் புரிய வைத்துள்ளதோடு,பெரும்பான்மை அரசியல் கட்சிகளுக்கு சிறுபான்மை கட்சிகள் ஒரு போதும் அடிமையாக இருக்க மாட்டார்கள் என்பதையும் உணர்த்தியுள்ளது அ.இ.ம.கா கட்சியும் அதன் தலைமையும்.
பெரும்பான்மை கட்சிகள் நினைப்பதை போன்று கைகளை கட்டி ஓரத்தில் நின்று பார்த்து விட்டு செல்லும் கட்சியாக ஒருபோதும் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியும் அதன் தலைமையும் இருக்க போவதில்லை.ஜனநாயக போராட்டத்திற்காக சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் அப்போதே சிறுபான்மையினர் அரசியல் ரீதியாக பாதுகாக்கபடுவார்கள் எனும் நிலை ஏற்படுமாயின் சிறுபான்மை கட்சிகளோடு சேர்ந்து செயலாற்றுவதையும் நாம் விரும்பக் கூடியவர்கள் என்பதையும் அ.இ.ம.கா கட்சியின் தலைவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
எனவே அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியினையும் அதன் தலைவரினையும் அரசியல் காழ்ப்புணர்வினால் வசைபாடுவதை விட்டு ஜனநாயகப் போராட்டத்தை தடை இன்றி முன்னெடுக்க கட்சி பேதமின்றி அனைவரும் முன்வர வேண்டும்.ஜனநாயகத்தை நிலை நிறுத்த அ.இ.ம.கா கட்சி என்றும் பின்வாங்கப் போவதில்லை.
அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சிக்கு இலங்கை முஸ்லீம் அரசியல் வரலாற்றில் தனித்துவமான ஒரு இடமுண்டு.அதனை ஒரு போதும் கட்சியும்,கட்சி தலைமையும் விட்டுக் கொடுக்க போவதில்லை.முஸ்லீம் சமூகம் அரசியல் ரீதியாக பாதுகாக்கபட வேண்டும் என்ற சிந்தனை மாத்திரமே அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் தலைவரிற்கு உள்ளதே தவிர பெரும்பான்மை கட்சிகளின் சுக போகங்களுக்கு அல்ல என்பதை இன்றைய போராட்டம் புரிய வைத்துள்ளதோடு,பெரும்பான்மை அரசியல் கட்சிகளுக்கு சிறுபான்மை கட்சிகள் ஒரு போதும் அடிமையாக இருக்க மாட்டார்கள் என்பதையும் உணர்த்தியுள்ளது அ.இ.ம.கா கட்சியும் அதன் தலைமையும்.
பெரும்பான்மை கட்சிகள் நினைப்பதை போன்று கைகளை கட்டி ஓரத்தில் நின்று பார்த்து விட்டு செல்லும் கட்சியாக ஒருபோதும் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியும் அதன் தலைமையும் இருக்க போவதில்லை.ஜனநாயக போராட்டத்திற்காக சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் அப்போதே சிறுபான்மையினர் அரசியல் ரீதியாக பாதுகாக்கபடுவார்கள் எனும் நிலை ஏற்படுமாயின் சிறுபான்மை கட்சிகளோடு சேர்ந்து செயலாற்றுவதையும் நாம் விரும்பக் கூடியவர்கள் என்பதையும் அ.இ.ம.கா கட்சியின் தலைவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
எனவே அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியினையும் அதன் தலைவரினையும் அரசியல் காழ்ப்புணர்வினால் வசைபாடுவதை விட்டு ஜனநாயகப் போராட்டத்தை தடை இன்றி முன்னெடுக்க கட்சி பேதமின்றி அனைவரும் முன்வர வேண்டும்.ஜனநாயகத்தை நிலை நிறுத்த அ.இ.ம.கா கட்சி என்றும் பின்வாங்கப் போவதில்லை.