வியாழேந்திர‌னுக்கு உல‌மா க‌ட்சி வாழ்த்து!!!


ர‌சாங்க‌த்தில் இணைந்து கிழ‌க்கு அபிவிருத்தி பிர‌தி அமைச்ச‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ட‌க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌ த‌மிழ் கூட்ட‌மைப்பின் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் வியாழேந்திர‌னுக்கு உல‌மா க‌ட்சி வாழ்த்து தெரிவித்திருப்ப‌துட‌ன் எதிர் கால‌த்தில் த‌மிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காக‌ அர்ப்ப‌ணிப்புட‌ன் செய‌ற்ப‌ட‌ வேண்டும் என‌வும் கேட்டுக்கொண்டுள்ள‌து.
இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வியால் பிர‌தி அமைச்ச‌ர் வியாழேந்திர‌னுக்கு அனுப்பி வைத்துள்ள‌ க‌டித‌த்திலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.அதில் அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,

த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பு என்ப‌து த‌மிழ் ம‌க்க‌ளை ஏமாற்றி வ‌ருகிற‌து என்ப‌தை நாம் ப‌ல‌ கால‌மாக‌ சொல்லி வ‌ருகிறோம். வேண்டுமென்றே கிழ‌க்கிலும் வ‌ட‌க்கிலும் த‌மிழ் முஸ்லிம் முர‌ண்பாடுக‌ளுக்கு உர‌மிட்டு விட்டு த‌ம‌க்கென‌ ந‌ல‌ன் வ‌ரும் போது முஸ்லிம் காங்கிர‌சுட‌ன் இணைந்து கொள்வ‌தையும் நாம் க‌ண்டு வ‌ருகிறோம்.
ஒருவ‌ர் ம‌க்க‌ளை ஏமாற்றும் இன‌வாத‌ க‌ட்சியிலிருந்து வில‌கி அர‌சுக்கு நேர‌டியாக‌ ஆத‌ர‌வு வ‌ழ‌ங்குவ‌த‌ன் மூல‌ம் அவ‌ர் இன‌வாத‌த்தை கைவிடுகிறார் என்ப‌தே பொருள் என்ப‌தால் அத்த‌கைய‌ ஒருவ‌ருக்கு வாழ்த்து தெரிவிப்ப‌து இன‌ ஒற்றுமையை விரும்பும் எம் மீது க‌ட‌மையாகும்.
ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌த்தில் இர‌ண்ட‌ற‌ க‌ல‌ந்து வாழும் முஸ்லிம் த‌மிழ் ம‌க்க‌ள் ம‌த்தியில் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் பாரிய‌ முர‌ண்பாடுக‌ள் தோற்றுவிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. த‌மிழ் முஸ்லிம் உற‌வுக்காக‌ பிர‌தி அமைச்ச‌ர்க‌ளான‌ ஹிஸ்புள்ளாஹ் ம‌ற்றும் அமீர‌லி போன்றோர் முய‌ற்சி செய்த‌ போதும் த‌மிழ் கூட்ட‌மைப்பு எம் பீக்க‌ளும் இன்னும் சில‌ இன‌வாதிக‌ளும் த‌மிழ் ம‌க்க‌ள் ம‌த்தியில் முஸ்லிம் விரோத‌ போக்கையே முன்னெடுத்த‌ன‌ர்.
இந்த‌ நிலையில் அர‌சுட‌ன் இணைந்துள்ள‌ பிர‌தி அமைச்ச‌ர் வியாழேந்திர‌னுட‌ன் இணைந்து கிழ‌க்கு அபிவிருத்தி பெற‌வும் த‌மிழ் முஸ்லிம் உற‌வை வ‌லுப்ப‌டுத்த‌வும் த‌மிழ‌ர்க‌ளும் முஸ்லிம்க‌ளும் அவ‌ரை வ‌ர‌வேற்க‌ வேண்டும் என‌வும் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -