எச்.எம்.எம்.பர்ஸான்-
இலங்கை அரசியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு இன்று (17) சனிக்கிழமை மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்குடா கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் விளக்கமளித்தார்.
அவர் தனதுரையில் திடீர் அரசியல் மாற்றம் நிகழ்ந்த நாள்முதல் இன்றுவரை நாட்டில் அரசியல் முன்னெடுப்புக்கள் எவ்வாறு செல்கின்றது எதிர்காலத்தில் என்னென்ன விடயங்கள் அமையவுள்ளது என்பனபற்றி மிகத்தெளிவாக உரையாற்றினார்.
இந்நிகழ்வுக்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி மற்றும் சபையின் உறுப்பினர்கள், சட்டத்தரணி எம்.எம்.ராசிக், வைத்தியர் அப்தாப் அமீர் அலி,அவர்களோடு பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், பள்ளிவாயல் நிருவாகத்தினர் மற்றும் ஏராளாமான பொதுமக்கள் போன்றோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.