த‌மிழ், முஸ்லிம் ச‌மூக‌மும் அவ‌ர்க‌ளின் க‌ட்சிக‌ளும் மிக‌வும் நிதான‌மாக‌ ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டும்-முபாற‌க் அப்துல் ம‌ஜீத்


நாட்டின் அர‌சிய‌ல் குழ‌ப்ப‌ சூழ‌லில் த‌மிழ், முஸ்லிம் ச‌மூக‌மும் அவ‌ர்க‌ளின் க‌ட்சிக‌ளும் மிக‌வும் நிதான‌மாக‌ ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டும் என‌ ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌வுன்சில் தெரிவித்துள்ள‌து.
இது ப‌ற்றி தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாவ‌து,
அண்மையில் ஜ‌னாதிப‌தி மைத்திரிபால‌ த‌ன‌க்கிருக்கும் அதிகாரத்தை வைத்து ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌வை பிர‌த‌ம‌ர் ப‌த‌வியிலிருந்து நீக்கி ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வை நிய‌மித்த‌தை தொட‌ர்ந்து இது விட‌ய‌த்தில் நாடு இர‌ண்டாக‌ பிள‌வு ப‌ட்டுள்ள‌து. ஒரு த‌ர‌ப்பு ர‌ணிலுக்கு ஆத‌ர‌வாக‌வும் இன்னொரு த‌ர‌ப்பு மைத்திரி - ம‌ஹிந்த‌வுக்கு ஆத‌ர‌வாக‌வும் உள்ள‌து.
இந்த‌ நிலையில் முஸ்லிம் த‌மிழ் க‌ட்சிக‌ள் ந‌டு நிலை வ‌கிப்ப‌த‌ற்கு ப‌திலாக‌ ஒரு ப‌க்க‌ சார்பை காட்டுவ‌தில் தீவிர‌மாக‌ இருப்ப‌தும் செய‌ல்ப‌டுவ‌தும் ந‌ல்ல‌த‌ல்ல‌ என்ப‌தை சொல்ல‌ வேண்டிய‌ க‌ட‌ப்பாட்டில் உள்ளோம்.
வ‌ர‌லாற்றை நாம் பார்க்கும் போது 1915 சிங்க‌ள‌ முஸ்லிம் க‌ல‌வ‌ர‌ சூத்திர‌தாரிக‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்ட போது அவ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ பொன்ன‌ம்ப‌ல‌ம் ச‌கோத‌ர‌ர்க‌ள் ந‌ட‌ந்து கொண்ட‌ போது இத‌ற்காக‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ள் த‌மிழ‌ர்க‌ளுக்கு சாத‌க‌மாக‌ இருப்ப‌ர் என‌ எதிர் பார்க்க‌ப்ப‌ட்ட‌து. ஆனால் இது த‌மிழ‌ர் முஸ்லிம்க‌ளுக்கிடையில் முர‌ண்பாட்டை உருவ‌க்கிய‌த்ட‌ன் கால‌ ஓட்ட‌த்தில் சிங்க‌ள‌ த‌மிழ் உற‌விலும் விரிச‌ல் ஏற்ப‌டுத்திய‌து. இத‌ன் போது த‌மிழ் ச‌ட்ட‌த்த‌ர‌ணிக‌ள் ந‌டுநிலையுட‌ன் செய‌ற்ப‌ட்டிருந்தால் த‌மிழ் முஸ்லிம் உற‌வில் இந்த‌ள‌வு விரிச‌ல் வ‌ந்திருக்காது என்ப‌து இப்போது உண‌ர‌ப்ப‌டுகிற‌து.

அண்மைய‌ அர‌சிய‌ல் குழ‌ப்ப‌த்தில் இந்த‌ நாட்டின் 70 வீத‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் 60க்கு மேற்ப‌ட்ட‌ க‌ட்சிக‌ளில் ஓரிரு க‌ட்சிக‌ளே பிர‌தான‌மாக‌ செய‌ற்ப‌டும் போது முஸ்லிம் த‌மிழ் க‌ட்சிக‌ள் ம‌ட்டும் விழுந்த‌டித்துக்கொண்டு ப‌கிர‌ங்க‌மாக‌ ஒரு ப‌க்க‌மாய் செய‌ற்ப‌டுவ‌து எதிர்கால‌த்தில் பாரிய‌ ஆப‌த்தை உண்டாக்கும் என‌ எச்ச‌ரிக்கிறோம்.
எந்த‌க்க‌ட்சிக்கும் ஆத‌ர‌வ‌ளிப்ப‌து ஜ‌ன‌நாய‌க‌ உரிமையாகும். ஆனால் அத‌னை முந்திரிக்கொட்டையாக‌ இல்லாம‌ல் புத்திசாதுரிய‌த்துட‌ன் ஆத‌ர‌வ‌ளிப்ப‌து ச‌மூக‌த்துக்கு ந‌ல‌ன் த‌ருவ‌தாகும்.
ஆக‌வே முஸ்லிம்க‌ளும் த‌மிழ‌ர்க‌ளும் அவ‌ர்க‌ள் க‌ட்சிக‌ளும் இத்த‌கைய‌ சூழ‌லில் ச‌மூக‌த்துக்கு பாதிப்பு இல்லாத‌ வ‌கையில் த‌ம‌து அர‌சிய‌ல் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை முன் கொண்டு செல்ல‌ வேண்டும் என்ப‌தை உல‌மா க‌வுன்சில் கேடுக்கொள்கிற‌து.
முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
த‌லைவ‌ர்
ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌வுன்சில்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -