மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் முப்பெரும் நிகழ்வுகள் -2018


எம்.பஹ்த் ஜுனைட்-
காத்தான்குடி மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலத்தின் முப்பெரும் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (30) பாடசாலை அதிபர் எஸ்.ஐ.யஸீர் அறபாத் தலைமையில் ஹிழுறிய்யா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு மற்றும் மாணவர்களுக்கான முன்னேற்ற அறிக்கையுடன் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் ஆசிரியர் தின நிகழ்வு என நடைபெற்ற முப்பெரும் நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மெளலானா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் அவர்கள் விஷேட அதிதியாகவும் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நினைவுச்சின்னங்கள்,பரிசில்கள் வழங்கி கெளரவித்தனர்.

இந் நிகழ்வில் அதிதிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -