கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக எம்.எம்.எஸ்.புஞ்சி பண்டார

அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக எம்.எம்.எஸ்.புஞ்சி பண்டார இன்று (05) தமது அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம கிழக்கு மாகாண மக்கள் வீதிப்பயணிகள் போக்குவரத்தில் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலே தன்னை நியமித்துள்ளதாகவும் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதாகவும் கடமையயை பொறுப்பேற்றுக்கொண்ட போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச்செயலாளர் நிமால் சோமரத்ன வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எம்.எஸ்.உதயகுமார மற்றும் அலுவலக ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -