கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் பகுதியில் உள்ள காணி உறுதிப்பத்திரங்கள் அற்றவர்களுக்கான உறுதிப் பத்திரங்கள் இரு கிழமைக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திரூகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.
காணி மறுசீரமைப்பு பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக உடனான சந்திப்பின் போது காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு உடன் நடவடிக்கைகளை துரிதமாக ஏற்பாடு செய்யுமாறு காணி மறுசீரமைப்பு ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (21) சந்தித்து கலந்துரையாடியதன் பின்னரே இவ்வாறு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கிண்ணியா பைசல் நகரில் காணி உரிமம் இல்லாதவர்களுக்கான காணி கச்சேரி அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில் அவர்களுக்கான உறுதிப் பத்திரங்கள் வழங்க முடியாமையிட்டு இது தொடர்பில் அமைச்சர் கயந்த கருணா திலகவின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்தே இவ்வாறாக இரு வாரங்களுக்குள் உரியவர்களுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
கிண்ணியா பைசல் நகரில் காணி உரிமம் இல்லாதவர்களுக்கான காணி கச்சேரி அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில் அவர்களுக்கான உறுதிப் பத்திரங்கள் வழங்க முடியாமையிட்டு இது தொடர்பில் அமைச்சர் கயந்த கருணா திலகவின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்தே இவ்வாறாக இரு வாரங்களுக்குள் உரியவர்களுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.