வட்டவளை கெரோலினா பகுதியில் லொறி சில்லில் சிக்குண்டு ஒருவர் பலி.

க.கிஷாந்தன்-
ட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கெரோலினா பகுதியில் 13.09.2018 அன்று அதிகாலை 3.30 மணியளவில் லொறி ஒன்றின் சில்லில் சிக்குண்டு நபர் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் நுவரெலியா ஹாவாஎலிய பிரதேசத்தினை சேர்ந்த தர்மலிங்கம் முரளிதரன் வயது 47 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி உரம் ஏற்றிச்சென்று கொண்டிருந்த உதவியாளர்; லொறியிலிருந்து வீழ்ந்து பின் சில்லில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
குறித்த விபத்து தொடர்பாக சாரதி வட்டவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் லொறியையும் பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் வைத்திய பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -