திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் ஜொலிபோயிஸ் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜொலி போயிஸ் சுப்பர் லீக் மா பெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியொன்று சனிக்கிழமை(8) கோலாகழமான முறையில் பேராறு பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கந்தளாய் பிரதேசத்தில் உள்ள எட்டு விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்றியதோடு,அணிதௌ தலைவர்களுக்கு கைப்பட்டியும் அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக முன்னால் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சட்டத்தரணிஎச்.எம்.எம்.பாயிஸ்,கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.ஏ.பாஹிர்,.சி.எம்.ஜவாஹிர்,மற்றும் முன்னால் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஏ.ஜே.எம்.ஜெஸில் மௌலவி,என்.எம்.கே.சுபார் கான் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.