எஸ்.அஷ்ரப்கான்-கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹுதா திடலில் புனித ஹஜ் பெருநாள் நபிவழித் தொழுகை 22.08.2018 புதன்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக கல்முனை அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதியா மற்றும் ஹுதா பள்ளிவாயில்களின் நிர்வாக குழுவினர் தெரிவித்தனர்.
இப்பெருநாள் திடல் தொழுகை மற்றும் குத்பா பிரசங்கத்தினை மெளலவி ஏ.எல்.எம்.ஸபீர் (கபூரி) அவர்கள் நடாத்தி வைக்கவுள்ளார்.
கல்முனை அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதியா, ஹுதா ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினர்கள் இணைந்து வழமை போன்று இம்முறையும் ஏற்பாடு செய்துள்ள இத்திடல் தொழுகைக்கு வருகின்ற ஆண் பெண் இருபாலருக்கும் ஒரே ஜமாஅத்தாக தொழுகை நடாத்தப்படவுள்ளது.எனவே அணைவரும் உரிய நேரத்திற்கு வீட்டில் வுழு செய்து கொண்டு வருகை தருமாறு வேண்டப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -