சிங்கள இலக்கிய உலகில் முக்கிய ஆளுமையும்,கலை இலக்கிய செயற்பாட்டாளரும் தமிழ் பேசும்இலக்கியவாதிகளுடன் நேசம் பேணும் நண்பர் கமல் பெரேரா வின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா கொழும்பில் எதிர்வரும் ஆகஸ்ட் 30ந்திகதி பிற்பகல் 3.00மணிக்கு தேசிய நூலக ஆவணவாக்கல்சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
இவ்விழாவில் கமல் பெரேராவின் சிறுகதைத் தொகுப்பும், மற்றும் கமல் பெரேரா சிங்களத்தில் மொழிபெயர்த்த சீன இலக்கியப் போராளி லூசுனின் சுயசரிதை நூலும், கமல் பெரேராவின்சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலும் வெளியிடப்படும்.
இவ்விழாவில் சகோதர சிங்கள எழுத்தாளர்களுடன், சகோதர தமிழ் எழுத்தாள நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு கமல் பெரேரா அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -