விபத்தில் படு காயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் சந்தி ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு முன்னால் கடந்த வியாழக் கிழமை ஏற்பட்ட விபத்தில் டிப்பர் வாகன விபத்தில் (02) படுகாயமடைந்துள்ள நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (07) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கிறது. இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா இடிமனை பிறப்பிடமாகக் கொண்டவரும் வெள்ளைமணல்,சீனக்குடா எனும் முகவரியை வசிப்பிடமாகவும் கொண்ட ஏ.சித்தீக் வயது (43) எனவும் தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது பைசல் நகர் சந்தியில் உள்ள தேனீர் கடையில் காலை சாப்பிட்டு விட்டு வெளியேரும் போது மண் டிப்பர் வாகனம் ஒன்று மோதியதால் இவ் விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்துக்குள்ளான நபர் படுகாயமடைந்து கிண்ணியா தளவைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த உயிரிழந்த நபர் கிண்ணியா நகர சபையின் ஊழியராகவும் கடமையாற்றுபவர் என்பவரும் தனது கடமை நேரத்தின்போதே இவ்விபத்து இடம் பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. டிப்பர் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவூம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -