க.கிஷாந்தன்-
தலவாக்கலை ஸ்ரீ சப்தர்ராமய விகாரையின் வருடாந்த மிகிந்து மகா பெரஹரா 30.06.2018 அன்று இரவு இடம்பெற்றது.
மகிந்து மகா பெரஹராவான இது தலவாக்கலை மல்லியப்பு சந்தியிலிருந்து ஆரம்பித்த வீதி வலம் வருதல், தலவாக்கலை நகர் வரை சென்று அங்கிருந்து விகாரை வரை சென்றது.
இந்த பெரஹராவில் மேல்நாட்டு, கீழ் நாட்டு, பாரம்பரிய மற்றும் புதிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் கலந்து தமது கலைத் திறமையை வெளிப்படுத்தினர். மேலும் இங்கு யானைகளின் பவனியும் விசேடமாக இடம்பெற்றது.
இதன்போது தலவாக்கலை மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான பௌத்த அடியார்களும், இதனை பார்வையிடுவதற்காக அதிகளவான மக்களும் வந்திருந்தமை குறிப்பிடதக்கது.