கிழக்கு மாகாண சுகாதார நிலையங்களுக்கு பாதுகாப்பு சேவை!


கிழக்கு மாகாணத்திலுள்ள நான்கு சுகாதார பிராந்தியங்களான திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் கல்முனை ஆகிய பணிமனைகளுக்குட்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு கடந்த காலங்களில் பாதுகாப்பு விடயத்தில் பாரிய குறைபாடு இருந்து வந்தது. 

குறிப்பாக இரவு நேரங்களில் வைத்தியசாலைகளில் காவலாளிகள் இல்லாத காரணத்தினால் அடிக்கடி சில சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இது தொடர்பாக கடந்த காலங்களில் கல்முனை பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள் எழுத்து மூலமான பல வேண்டுகோள்களையும் விடுத்திருந்ததாக அறியமுடிகின்றது. 

எனினும் தற்போது அந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் முன்னெடுத்து, தனியார் பாதுகாப்பு சேவையை நடாத்தும் நிறுவனமொன்றிற்கு அந்தப் பொறுப்பு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது சிபாரிசினை ஏற்கனவே மகாகாணப் பணிப்பாளருக்கும் அனுப்பியிருந்தார். அந்த வகையில், கல்முனை சுகாதார பிராந்தியத்திலுள்ள சகல 13 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கும் மற்றும் சகல பிரதேச வைத்தியசாலைகளுக்கும் இரவு நேரத்தில் அதாவது இரவு 6 மணி தொடக்கம் மறுநாள் காலை 6 மணி வரை பாதுகாப்பு சேவை வழங்கப்படுகிறது. அதேபோன்று, மாகாண சபையின் கீழ் வரும் ஆதார வைத்தியசாலைகளுக்கும் இரவு, பகல் இரண்டு நேரங்களுக்கும் பாதுகாப்பு சேவை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -