பிணைப்புடன் சிறந்த இலக்கை நோக்கிய பயணத்தில் சஹிரியன் 99/02 மாணவர்களின் ஒன்றுகூடல்...

பிணைப்புடன் சிறந்த இலக்கை நோக்கிய பயணத்தில் சஹிரியன் 99/02 மாணவர்களின் ஒன்றுகூடல்...

கல்முனை சாஹிராவில் கல்விகற்ற 99/02 பருவகால மாணவர்களின் ஒன்றுகூடல் 30.06.2018 அன்று சாய்ந்தமருது சீபிறீஸின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

வித்தியாசமான முறையில் நினைவுச்சின்னங்கள் அணிவித்து தங்களது பிணைப்பை வெளிக்காட்டியா இந்நிகழ்வு ஏ.ஆர்.எம்.ஹிம்சாத்தின் கிறாஅத்துடன் ஆரம்பமானது. வரவேற்ப்புரையைஏ.எம்.றம்ஸான் நிகழ்த்தினார். நண்பர்களிடையே சிறந்த ஒரு பிணைப்பை ஏற்படுத்தி, எதிர்காலத்தில் இலக்குகளை முன்னோக்கி செல்தல். என்ற குறிக்கோளுடன் தங்களது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

இங்கு பல முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன. WhatsApp குழுமத்தை வலுவூட்டி செயற்படுவது  என்றும் சீருடை ஒன்றை தயார் படுத்துவது என்றும் கொள்கையளவில் தீர்மானிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் அடிக்கடி சந்திப்புக்களை ஏற்படுத்துவது என்றும் ஆசிரியர்களைக் கௌரவித்தல் சமூக நலத்திட்டங்களில் ஈடுபடுதல் போன்ற தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
ஏ.சி.எம்.பினோஸிடிர்,ஏ.ஜே.எம்.அமானுல்லாஹ் மற்றும் இசட்.எம்.ஹக்கீம் ,எம்.ஐ.எம்.றியாஸ் போன்றோரும் கருத்துக்களை வெளியிட்டனர்.

இராப்போசனத்துடன் நிகழ்வு நிறைவுற்றது.





















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -