பாடசாலை விட்டு வீடு சென்ற மாணவன் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: மீராவோடையில் சம்பவம்


எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை மார்க்கட் வீதியில் பாடசாலை மாணவன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மாணவனின் கால் உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இன்று (2) ம் திகதி இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,

மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலயத்தில் எட்டாம் வகுப்பில் கல்வி கற்றுவரும் ஈசா லெவ்வை ஹாஜிம் எனும் மாணவன் பாடசாலை முடிந்து வீடு செல்லும் சந்தர்ப்பத்தில் வீதியைக் குறுக்கறுக்கும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் பலத்த காயமடைந்த மாணவன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -