சாய்ந்தமருது மல்ஹர் சம்ஸ் மகாவித்தியாலய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

அகமட் எஸ். முகைடீன்-
சாய்ந்தமருது மல்ஹர் சம்ஸ் மகாவித்தியாலய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் அக்கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம்.ஐ. மதனி தலைமையில் நேற்று (30) திங்கட்கிழமை மாலை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் விடுத்த அழைப்பை ஏற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்துகொண்டு பாடசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
இதன்போது குறித்த பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இக்கல்லூரி மற்றும் இப்பிரதேச அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அமைச்சர் ஹரீஸ் அவ்வப்போது பெரிதும் பங்களிப்புச் செய்து வந்துள்ளார். சமூக நலன் சார்ந்த விடயங்களில் முன்னின்று செயற்படக்கூடிய ஒருவர், எம்மைப் புரிந்துகொண்டவர், அவர் ஆற்றிய நற்பணிகளை நினைவு கூர்ந்து இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவிப்பதாக தெரிவித்த கல்லூரி அதிபர் மதனி உள்ளிட்ட ஆசிரியர்கள் பாடசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பில் பிரதி அமைச்சருக்கு எடுத்துக் கூறினர்.
சாய்ந்தமருது மல்ஹர் சம்ஸ் மகா வித்தியாலயத்தை மல்ஹர் சம்ஸ் மகளிர் வித்தியாலயமாக மாற்றம் செய்து தருமாறும் குறித்த பாடசாலைக்கு நுழைவாயில் கோபுரம் மற்றும் ஆராதனை மண்டபம் உள்ளிட்ட உள்ளக அபிவிருத்திகளை செய்து தருமாறும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யுமாறும் கேட்டுக்கொண்டனர்.

குறித்தி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை கட்டம் கட்டமாக நிறைவு செய்து தருவதாக இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ் உறுதியளித்தார்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -