அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் மத்ரஸா மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான இலவச விசேட தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கு திவுரும்பொல மானாருல்ஹூதா அரபுக் கல்லூரியில் சிறப்பாக இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் Leadership Creating Campus நிறுவனர் ரயீஸ் மீரா பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு தலைமைத்துவ பயிற்சி மற்றும் ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கி நிகழ்வை சிறப்பாக நடாத்தி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வில் விஷேட அதிதியாக குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாவட்டத் தலைவரும் சதொச பிரதித் தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் (MA) குருநாகல் மாவட்ட ம.கா கல்வி பொறுப்பாளர் றியாஸ் அzஸ்ஹரி, பிங்கிரிய தேர்தல் தொகுதி அமைப்பாளர் அப்துல்லாஹ்,மனாருல் ஹூதா அரபுக் கல்லூரி அதிபர்,ஆசிரியர் குழாம் உட்பட பெரும் எண்ணிக்கையான மாணவர்களும் கலந்து கொண்டனர்.