நுவரெலியாவில் பன்றி இறைச்சியுடன் ஒருவர் கைது


க.கிஷாந்தன்-நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொப்பாஸ் பகுதியில் பன்றி இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் ஹக்கல வினவிலங்கு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யபட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் 20.07.2018 அன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹக்கல வினவிலங்கு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இறைச்சி கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கைப்பற்றப்பட்ட பன்றி இறைச்சியை குறித்த நபர் தன்வசம் வைத்திருந்த வேளையிலேயே மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யபட்ட சந்தேக நபர் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் 20.07.2018 அன்று ஆஜர்படுத்தபட்டதாக ஹக்கல வினவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் நுவரெலியா தோட்டம், கீழ்பிரிவு, லபுக்கலை எனும் பகுதியை சேர்ந்த டிம்.அனுர ராஜபக்ஷ என்பவராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -