யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனை உடன் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சுப் பதவியில் இருந்து இடைநிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இவர் வெளியிட்ட கருத்து தொடர்பான விசாரணைகள் முடியும் வரையில், இவரது இராஜாங்க அமைச்சுப் பதவியை தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்குமாறே பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று(02) யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி நடமாடும் சேவை நிகழ்வொன்றின் போது, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப்புலிகள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.டைலிநியுஸ்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -