எம்.ஜே.எம்.சஜீத்-
அட்டாளைச்சேனை பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நடவடிக்கை தொடர்பான கூட்டம் முன்னாள் அமைச்சரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தலமையில் நேற்று (02) ஒஸ்றா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.எஸ்.எம்.ஜஃபர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், உறுப்பினருமான எம்.ஏ.அன்சில் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசத்தின் தேசிய காங்கிரஸ் பிரதே சபை உறுப்பினர்கள், கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.