உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் அவர்களின் வாழ்த்து


2018ம் ஆண்டுக்குரிய‌ ஈதுல் பித்ர் நோன்புப்பெருநாளை கொண்டாடும் இல‌ங்கை ம‌ற்றும் உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ளுக்கு உல‌மா க‌ட்சி பெருநாள் வாழ்த்துக்க‌ளையும் பிரார்த்த‌னைக‌ளையும் தெரிவித்துக்கொள்கிற‌து.
உண்மையில் பிறை என்ப‌து உல‌க‌ம் முழுவ‌தும் ஒன்றுதான். உல‌க‌ளாவிய‌ முஸ்லிம் ச‌மூக‌த்தை பார்த்து "பிறை க‌ண்டு நோன்பு பிடியுங்க‌ள் பிறை க‌ண்டு விடுங்க‌ள்" என‌ எக்கால‌த்துக்கும் ஏற்ற‌ அபூர்வ‌மான‌ வ‌ச‌ன‌த்தை எம‌க்கு சொன்ன‌ ந‌பிய‌வ‌ர்க‌ள் மீது இறைவ‌னின் சாந்தியும் ச‌மாதான‌மும் உண்டாவ‌தாக‌.
இன்றைய‌ இந்த‌ நோன்புப்பெருநாள் உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ளின் ஒற்றுமையை காட்டுகிற‌து. ஒரு சில‌ நாடுக‌ளின் ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர்க‌ள் இன்ன‌மும் ச‌த்திய‌த்தை விள‌ங்காத‌ நிலையில் இருந்தாலும் நிச்ச‌ய‌ம் உல‌க‌மெலாம் ஒரு பிறைதான் என்ற‌ உண்மையை புரியும் கால‌ம் விரைவில் வ‌ரும்.
இன்றைய‌ பெருநாளில் உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ளின் ஒற்றுமைப்ப‌ல‌த்துக்காக‌ நாம் பிரார்த்திப்ப‌துட‌ன் முஸ்லிம்க‌ள் ம‌த்தியில் ஆயுத‌ மோத‌ல்க‌ள் நீங்கி ச‌மாதான‌மும் "நாம் முஸ்லிக‌ள்" என்ற‌ ஒற்றுமையும் ஓங்க‌ அனைவ‌ரும் ஒன்று ப‌டுவோம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -