சமூக ஒற்றுமைக்காக அர்ப்பணிப்புடன் உழைப்போம்; கல்முனை முதல்வர் றகீப் வேண்டுகோள்..!


அஸ்லம் எஸ்.மௌலானா-
மழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று ஆன்மீக ரீதியில் பக்குவப்பட்டுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஏனைய சமூகத்தினருக்கு முன்மாதிரியாக திகழ்வதுடன் சமூக ஒற்றுமை, இன ஐக்கியம், தேசிய நல்லிணக்கம் என்பவற்றுக்காகவும் நாட்டின் நிரந்தர சமாதானத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் உழைக்க திடசங்கற்பம் பூணுவோம் என கல்முனை மாநகர முதல்வர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

நோன்பு மூலம் நாம் கற்றுக் கொண்டுள்ள அனைத்து நற்பண்புகளையும் எமது வாழ்க்கையில் முழுமையாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே நோன்பின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றியவர்களாக நாம் மாற முடியும் என்பதை புரிந்து கொண்டு செயற்படுவோமாக.
குறிப்பாக ஏழை, எளியவர்களின் பசியையும் கஷ்டங்களையும் உணர்ந்துள்ள நாம் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக எப்போதும் நேசக்கரம் நீட்டுபவர்களாகவும் வீண் செலவுகளை தவிர்த்து, சமூகத்தின் கல்வி, கலாசார வளர்ச்சிக்கும் பயனுள்ள விடயங்களுக்கும் வாரி வழங்குபவர்களாகவும் கெட்ட நடத்தைகளை முற்றாக தவிர்ந்து, நற்செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் துன்ப, துயரங்களின்போது பொறுமை, சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பவர்களாகவும் எந்த மனிதருடனும் விரோதம், குரோதம், பகைமை களைந்து நல்லெண்ணத்துடன் பழகுபவர்களாகவும் நாம் மாற வேண்டும்.
மேலும், உலகின் பல பாகங்களிலும் நசுக்கப்பட்டு வருகின்ற எமது சகோதரர்களுக்காகவும் குறிப்பாக சிரியா, பலஸ்தீன், ஈராக், மியன்மார் போன்ற நாடுகளில் கொன்றொழிக்கப்படுகின்ற அப்பாவி முஸ்லிம்களின் விடுதலைக்காகவும் இப்புனிதத் திருநாளில் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.
அத்துடன் இன்று பெருநாள் கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். ஈத்முபாரக்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -