ஏறாவூர் "சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியம்" இப்தார் நிகழ்வு 03-06-2018 நேற்று மாலை ஏறாவூர் ஆற்றங்கரை ஜெய்னுலாப்தீன் ஆலிம் லகூன்பாக்கி ல் சிறப்பாக இடம்பெற்றது.
ஒன்றியத்தின் தலைவர் பாறூக்கின் ஆலோசனையும் வழிகாட்டலிலும் இடம் பெற்ற நிகழ்வு பிரதி தலைவரும் மனித உரிமைஅமைப்பின் மட்டக்களப்பு மவட்ட விசாரணை அதிகாரியுமான ஜனாப் ஜ,எம், தஸீர் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிதா மதிப்புக்குரிய வாசித் அலி அவர்கள் உட்பட நகர சபை உறுப்பினர்களான ரியாழ்,நிசார் மற்றும் ஏறாவூர் சமூக சேவைகள் உத்தியோகத்தர் நஜிமுத்தின் சேர்,ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி நஸீர் ஹாஜியார் உட்பட புத்திஜீவிகளும் ,பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் விசேட துவா பிரார்த்தனையும் இடம்பெற்றது.நிகழ்வு சிறப்பாக இடம் பெற ஓத்துளைப்பு வழங்கிய சங்க உறுப்பினர்களுக்கும்,வருகை தந்த அதிதிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஒன்றியத்தின் விசேட ஆலோசகர் ஜனாப் ஹனீபா ஜேபி அவர்களினால் நன்றியுரை வழங்கப்பட்டு ஸலவாத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.