கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வு

எம்.என்.எம்.அப்றாஸ்-
ல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வு 01.06.2018 நேற்று அமைப்பின் கல்முனைக் காரியாலயத்தில் விமர்சையாக இடம்பெற்றது.

அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி எம். எச். ரிஸ்பின் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. மேற்படி நிகழ்வில் மனிதவள அமைப்பின் செயலாளர் எஸ்.எல்.இப்ராஹிம் உட்பட அமைப்பின் நிருவாக குழு அங்கத்தவர்கள் உட்பட வைத்தியர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் , மற்றும் சமூக நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

அமைப்பின் எதிர்கால செயல்திட்டங்கள் மற்றும் கல்முனைக்கான வளைகுடா அமையம் நடை முறைப்படுத்தும் வறிய மற்றும் தேர்ச்சி மிகு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பிலும் பல்வேறுபட்ட ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன இறுதியாக நலன்புரி செயலாளர் மௌலவி எம். ஐ.எம்.இக்பால் அவர்களின் மார்க்க சொற்பொழிவுடன் இப்தார் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றமை குறிப்பித்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -