செஸ்டோவின் குடும்ப ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும்!!!

பிராந்தியத்தின் பிரபலங்களை உள்ளடக்கிய பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடராகச் செய்துவரும் செஸ்டோ அமைப்பு, 2018-06-02 ஆம் திகதி தலைவர் ஏ.எச்.எம்.றிஷான் தலைமையில் அமைப்பின் அங்கத்தவர்களின் குடும்பத்தினர்களை உள்ளடக்கிய வருடாந்த ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் நிந்தவூர் புளு சேன்ட் கடற்கரை விடுதி முற்றலில் இடம்பெற்றது.

அமைப்பின் செயலாளர் எம்.ஏ.எம்.சிறாஜ் மற்றும் பொருளாளர் எஸ்.எச்.எம்.அஸ்மி ஆகியோரது வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

கல்முனை சாஹிராக் கல்லூரியில் 99 ஆம் ஆண்டு கல்வி கற்ற பழைய மாணவர்களை உள்ளடக்கிய ”செஸ்டோ” ZESDO (Zairians’ Education & Social Development Organization) என்ற"செஸ்டோ" அமைப்பானது 2013 ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு, அது சமூக ரீதியான குறிக்கோள்களை மையமாக கொண்டு தூர நோக்கு சிந்தனையுடன், சமூகத்தின் கல்வி, கலை, கலாசார அபிவிருத்தியில் முடியுமான அளவில் பங்களிப்பு செய்து இயங்கிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 











எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -