ஆட்டோ ஓட்டுனர்களுக்கும், கரத்தை சொந்தகாரர்களுக்கும் சமுர்த்தி வழங்கவும் அமைச்சர் ஹரிசனிடம் அப்துல்லா மஹ்ரூப் எம்பி கோரிக்கை .


-வழங்க நடவடிக்கை எடுப்பதாக சமுர்த்தி அமைச்சர் ஹரிசன் தெரிவிப்பு- 
ன்று திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த சமுர்த்தி , சமூக வலுவூட்டல் அமைச்சர் ஹரிசன் இன்று நடைபெற்ற சமுர்த்தி வங்கி , மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டார் . 
இந் நிகழ்வில் கலந்துகொண்ட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருதிகுழு இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் திருகோணமலை மாவட்டத்தை பொருத்தமட்டில் 38000 அதிகமான சமுர்த்தி பெறுவோர் இருக்கின்றனர் , மேலும் 19500 சமுர்த்தி கொடுப்பனவுகள் வேண்டியிருக்கின்றது இதில் எத விதமான வேறுபாடின்றி வறுமையை எதிர்கொள்பவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும்.

இன்று ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோக்களை நிதி நிறுவனங்களிடமிருந்து தவணை முறையில் பணம் செலுத்தி பெற்று கடனாளிகளாக தமது தொழிலை மிகவும் கஷ்டமான நிலையில் செய்துவருவதோடு அவர்களுடைய வாழ்கையையும் பல துன்பங்களுக்கு மத்தியில் நடத்திவருகின்றனர் இவர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் நல்ல நிலைக்கு வரும் வரையில் சமுர்த்தி கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அமைச்சரிடத்தில் கேட்டுகொண்டார் . அத்தோடு மாட்டுவண்டில்களில், சைக்கிள்களில் விறகு தொழில் செய்வோருக்கும், கடல் தொழிலை சுதந்திமாக செய்ய முடிதுள்ளதினால் அவர்களுக்கும் சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்க அமைச்சர் முன்வரவேண்டும் எனவும் கேட்டுகொண்டார் .

இதன் பின்னர் இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஹரிசன் அவர்கள் நல்லாட்சியில் சமுர்த்தி கொடுப்பனவு பெறுபவர்களின் எண்ணிகையை நாடு முழுவதும் அதிகரிக்கவுள்ளதாகவும் அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் வழங்குகையில் இங்கு பாராளுமன்ற உறுப்பினர் எனது நண்பர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்கள் குறிப்பிட்டதுபோல ஆட்டோ ஓட்டுனர்கள் , காட்டு தொழிலார்கள் , கடற்தொழி லார்களுக்கும் சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேட்கொள்ளவுல்லாத தெரிவித்ததார் . அத்தோடு இம்மாவட்டத்தில் இருகின்ற சமுர்த்தி வங்கி , மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வறுமை கோட்டில் வாழும் மக்களுக்கு அவர்களின் முன்னேற்றதிட்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென்றும் கூறினார். 








.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -