காட்டுப்புலம் - பாண்டவெட்டையில் ஆபத்தானவர்கள் வசிக்கின்றனர். அங்கு கஞ்சா கடத்தல், கசிப்பு உற்பத்தி, தவறணைக்குக் கொடுக்காமல் கள்ளு விற்பனை என்பன இடம்பெறுகின்றன. அங்கு தனியாகச் செல்ல முடியாது. எனக்கு இரு பொலிஸார் தான் பாதுகாப்புக்குத் தரப்பட்டுள்ளது. றெஜினா கொல்லப்பட்டமைக்கு அந்தச் சமூகம்தான் காரணம். இராணுவத்தால் றெஜினா கொல்லப்பட்டால் நான் உடனே அங்கு சென்றிருப்பேன். ஆனால் அங்குள்ள ஒருவரால்தான் அச்சிறுமி கொல்லப்பட்டார் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் அனந்தி சசிதரன் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் எந்தவித நிகழ்விலும் ஏன் கலந்து கொள்ளவில்லை என ஊடகவியலாளர் வினவியபோது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுழிபுரம் பாடசாலையில் ஒன்றில் கல்வி பயிலும் 6 வயதுச் சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இப்பிரதேசமானது அமைச்சர் அனந்தி சசிதரனின் தேர்தல் தொகுதியாகும்.ஆனால் சம்பவம் இடம்பெற்ற வேளை அப்பிரதேசத்திற்கு சென்று நிலைமையை பாரக்கவில்லை என்ற விமர்சனம் பல தரப்பினர்களால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -