உடரதல்ல தோட்டத்தில் ஏற்பட்ட தீயினால் இரண்டு குடியிருப்புகள் எரிந்து நாசம்

க.கிஷாந்தன்-
நானுஒயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடரதல்ல தோட்டத்தில் ஏற்பட்ட தீயினால் இரண்டு குடியிருப்புகள் எரிந்து சாம்பலாகியுள்ளது. இச்சம்பவம் 26.05.2018 அன்று இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த இரண்டு வீடுகளில் ஒரு வீட்டில் மாத்திரம் குடும்ப உறுப்பினர்கள் இருந்துள்ளனர். மற்றுமொரு வீட்டில் உள்ளவர்கள் தமது உறவினர்கள் வீட்டுக்கு சென்றிருந்தபோதே இந்த தீ சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இதன் போது வீட்டில் இருந்த பெருமதிமிக்க பொருட்களும், பாடசாலை மாணவர்களின் உபகரணங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

இதேவேளை தீயினை பரவவிடாமல் பொதுமக்கள் பொலிஸ் அதிகாரிகள் தீயனைக்கும் படையினர் இனைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தீ பரவியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான விசாரணையை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -