ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டமான கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை சுற்றுவட்டம் முதல் தாழவட்டுவான் சந்தி வரையில் நவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை பிரதி அமைச்சர் ஹரீஸ் இன்று (24) வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப், பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே. லியாகத் அலி, அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், ஏ.எம். றினோஸ் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.