ஓட்டமாவடி - தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் ஹிப்ழ் பிரிவில் கல்வி கற்று வரும் சம்மாந்துரையைச் சேர்ந்த மாணவன் ஜே.எம்.ஷுக்ரி குறுகிய காலத்தில் முழுக் குர்ஆனையும் மனனம் செய்து சாதனை படைத்துள்ளார்.
குறுகிய காலத்தில் சிறப்பான முறையில் முழுக் குர்ஆனையும் மனனம் செய்த மாணவனுக்கு கல்லூரியின் அதிபர் எம்.பீ.எம். இஸ்மாயில் மதனி அவர்களும் மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள், உலமாக்கள் ஆகியோர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு குறித்த மாணவனுக்கு அல்லாஹ் அவரை இஸ்லாமியப் பணிக்காக பொருந்திக்கொள்வானாக எனும் பிராத்தனையையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.