கிழக்கின் பழமையும் பிரபல்யமும் மிக்க அமைப்புகளில் ஒன்றான கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.வை.எம்.சலீம் (கிழக்குமாகாண உள்ளுராட்சி ஆணையாளர்) தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் 2018-05-29 ஆம் திகதி இடம்பெற்றது.
ஒன்றியத்தில் நிர்வாகப்பணிப்பாளர் யூ.கே.காலித்தீனின் வழிநடத்தலில் இடம்பெற்ற குறித்த இப்தார் நிகழ்வில் அஷ்செய்க் ஏ.எம்.மஹ்றுப் (ரஹீமி) மார்க்க சொற்பொழிவாற்றினார்.
நிகழ்வுக்கு மாநகரசபை உறுப்பினர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், ஊர்ப் பிரமுகர்கள் ஒன்றியத்தின் அங்கத்தினர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.