காரைதீவின் பிரபல சமுகசேவையாளர் றோட்டரிக்கழகத்தலைவர் றோட்டரியன் ருத்ரன் காலமானார்.



காரைதீவு நிருபர் சகா-
காரைதீவின் பிரபல சமுகசேவையாளரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் மக்கள்வங்கிக்கிளையின் முன்னாள் முகாமையாளருமான றோட்டரியன் சங்கரப்பிள்ளை ருத்ரன் (28) காரைதீவில் காலமானார்.
மரணிக்கும்போது அவருக்குவயது 65. ஓய்வுநிலை தாதிய உத்தியோகத்தர் கலையரசி மற்றும் இருபிள்ளைகளையும் விட்டுச்சென்றுள்ளார்.

காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் போசகராகவும் சுவாமி விபுலானந்த
ஞாகார்த்தப்பணிமன்றத்தின் பொருளாளராகவும் காரைதீவு ஹொக்கி லயன்ஸ் கழகத்தின் போசகராகவும் காரைதீவு பத்ரகாளி அம்பாள் ஆலயத்தின் பிரதான நிர்வாகசபை உறுப்பினராகவும் உகந்தைமலைமுருகனாலய யாத்திரீகர் சங்கத்தின்
மடாதிபதியாகவும் இன்னும் பலஅமைப்புகளில் முக்கிய பதவிகளை வகித்து அரிய பல சேவையாற்றிவருகின்றார்.

அன்னாரது பூதவுடல்  (29) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4மணியளவில் காரைதீவு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படுமென்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்தர் பிறந்த வீட்டை அண்மையில் பழைமை குன்றாமல் மீளவடிவமைத்து நவீனமயப்படுத்திய பெருமை இவரையே சாரும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -