காரைதீவு நிருபர் சகா-
காரைதீவின் பிரபல சமுகசேவையாளரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் மக்கள்வங்கிக்கிளையின் முன்னாள் முகாமையாளருமான றோட்டரியன் சங்கரப்பிள்ளை ருத்ரன் (28) காரைதீவில் காலமானார்.
மரணிக்கும்போது அவருக்குவயது 65. ஓய்வுநிலை தாதிய உத்தியோகத்தர் கலையரசி மற்றும் இருபிள்ளைகளையும் விட்டுச்சென்றுள்ளார்.
காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் போசகராகவும் சுவாமி விபுலானந்த
ஞாகார்த்தப்பணிமன்றத்தின் பொருளாளராகவும் காரைதீவு ஹொக்கி லயன்ஸ் கழகத்தின் போசகராகவும் காரைதீவு பத்ரகாளி அம்பாள் ஆலயத்தின் பிரதான நிர்வாகசபை உறுப்பினராகவும் உகந்தைமலைமுருகனாலய யாத்திரீகர் சங்கத்தின்
மடாதிபதியாகவும் இன்னும் பலஅமைப்புகளில் முக்கிய பதவிகளை வகித்து அரிய பல சேவையாற்றிவருகின்றார்.
அன்னாரது பூதவுடல் (29) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4மணியளவில் காரைதீவு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படுமென்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்தர் பிறந்த வீட்டை அண்மையில் பழைமை குன்றாமல் மீளவடிவமைத்து நவீனமயப்படுத்திய பெருமை இவரையே சாரும்.