யாழ்ப்பாண நகரில் சிரிய மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


பாறுக் ஷிஹான்-

சிரியாவில் இடம்பெற்றுவரும் போரால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும் அங்கு போர்நிறுத்தத்தை நிலைநாட்ட ஐ.நாவிடம் வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டமானது யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று (1)முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியது.

சிரியா தலைநகர் டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள கிழக்கு கூட்டாவில் நடந்த தாக்குதல்களில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.

இந்த படுகொலைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதே போன்ற அழிவை ஈழத் தமிழினமும் சந்தித்திருந்தது. இந்த நிலையிலேயே அழிவை எதிர்கொண்ட இனம் என்ற வகையில் சிரிய மக்களுக்காக போராடுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -