இந்திய பிரஜைகளால், சிறுநீரகங்கள் வழங்கப்பட்டு, இலங்கையிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் சிறுநீரக மாற்று சிகிச்சைகள் செய்யப்படுவதாக, சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகியதையடுத்தே, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, மேற்கண்டவாறு பணித்துள்ளார்.
“மனித உறுப்புகளை தானம் செய்தல்” எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
உறுப்புகளை தானம் செய்வதற்கு முன்வருவோருக்கு, ஒரு நிவாரணத் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறிய அவர், அவர்கள், வாழ்க்கை முழுவதும், அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுக்கொள்வதற்கான திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
“மனித உறுப்புகளை தானம் செய்வதில், இலங்கை, ஒரு நிலையான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்பதையிட்டு நான் பெறுமையடைகின்றேன். எமது நாட்டிலுள்ள அர்ப்பணிப்புமிக்க, உயர் தொழில்முறை வைத்தியர்கள், சிறுநீரகங்கள், இருதயங்கள் மற்றும் பிற உறுப்பு மாற்று சிகிச்சைகளை, குறைந்த சலுகைகளுடன், மிகவும் வெற்றிகரமான முறையில் செய்து முடித்துள்ளனர்” என்று அவர் மேலும் கூறினார்.