வெளிநாட்டவர்களிடமிருந்து சிறுநீரகங்களைப் பெற்றுக்கொள்ள தடை..!

வெளிநாட்டவர்களிடமிருந்து சிறுநீரகங்களைப் பெற்று, இலங்கையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதற்கு தடை விதித்துள்ள சுகாதார அமைச்சு, அவ்வாறு சிறுநீரகங்களை பெறுவோர் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை என்றும் சிறுநீரகங்களைத் தானமாகக் கொடுப்பதற்கு முன்வருவோருக்கு, பணம் செலுத்தத் தேவையில்லை என்றும், பணித்துள்ளது.

இந்திய பிரஜைகளால், சிறுநீரகங்கள் வழங்கப்பட்டு, இலங்கையிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் சிறுநீரக மாற்று சிகிச்சைகள் செய்யப்படுவதாக, சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகியதையடுத்தே, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, மேற்கண்டவாறு பணித்துள்ளார்.

“மனித உறுப்புகளை தானம் செய்தல்” எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

உறுப்புகளை தானம் செய்வதற்கு முன்வருவோருக்கு, ஒரு நிவாரணத் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறிய அவர், அவர்கள், வாழ்க்கை முழுவதும், அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுக்கொள்வதற்கான திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

“மனித உறுப்புகளை தானம் செய்வதில், இலங்கை, ஒரு நிலை​யான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்பதையிட்டு நான் பெறுமையடைகின்றேன். எமது நாட்டிலுள்ள அர்ப்பணிப்புமிக்க, உயர் தொழில்முறை வைத்தியர்கள், சிறுநீரகங்கள், இருதயங்கள் மற்றும் பிற உறுப்பு மாற்று சிகிச்சைகளை, குறைந்த சலுகைகளுடன், மிகவும் வெற்றிகரமான முறையில் செய்து முடித்துள்ளனர்” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -