தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேரவேண்டும் என்ற செய்தியை தமிழ்மக்கள் இந்த தேர்தலூடாக வெளிப்படுத்தியுள்ளனர்!



பிரத்தியேக நேர்காணலில் த.தே.கூ.எம்.பி.. கோடீஸ்வரன் தெரிவிப்பு!
பிரத்தியேக நேர்காணல்:


வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்

டைபெற்றுமுடிந்த தேர்தலூடாக வடக்குகிழக்கு தமிழ்மகக்ள் ஒரு செய்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அதுஎன்னவென்றால் தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேரவேண்டும் என்பதுதான். ஒற்றுமை காலத்தின் கட்டாயம் என்றுசொல்லியிருக்கிறார்கள்.

இவ்வாறு காரைதீவில் நேற்று இடம்பெற்ற பித்தியேக நேர்காணலில் கருத்துரைத்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்:
வடக்கு கிழக்கில் பெரும்பாலான சபைகளில் த.தே.கூட்டமைப்பு நிறைய ஆசனங்களைப்பெற்றுள்ளன. எனினும் பலஇடங்களில் தனித்து ஆட்சிமையக்கமுடியாத நிலை. அந்த மக்கள் சொன்ன செய்தி ஒற்றுமையாகவாருங்கள் என்பதுதான்.

ஒரே கொள்கையோடு பயணிக்கின்ற கட்சிகள் கட்டாயமிணையவேண்டிய காலகட்டமிது. தமிழ்த்தேசியத்திற்கு விரோதமாக சில கட்சிகளிருக்கலாம். அவைகளும் தேசியத்தின்பால் வரவேண்டும் என்றார்.

எமது ஊடகவியலாளர் சகா கேள்வியெழுப்பகையில்:
வடக்கு கிழக்கில்பெரும்பாலான சபைகளில் த.தே.கூட்டமைப்பு ஆசனங்களைக்கைப்பற்றியிருந்தபோதிலும் தனித்து ஆட்சியமைக்கமுடியாத நிலைமையும் வாக்குவங்கியில் கணிசமான சரிவும் ஏற்பட்டுள்ளதே இது பற்றி என்னகூறவிளைகின்றீர்கள்?
பதிலளித்த கோடீஸ்வரன்:
நீங்கள் கூறுவது உண்மைதான். அதற்குப் பல காரணங்கள் உள்ளன.
முதலாவது காரணம். எமது சமகால காய்நகர்த்தல்கள் இராஜதந்திரரீதீயாக தந்திரோபாய செயற்பாடுகளில் உரிமைப்பிரச்சினை தொடர்பாக நாம்கவனம்செலுத்திவந்தோம். அனைத்தையும் வெளிப்படையாகக்கூறமுடியாது.இதனை ஏனைய கட்சிகள் பிழையாகசித்திரித்து பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்கள்.அதுவும் ஒரு தற்காலிக பின்னடைவு.
இரண்டாவது காரணம்:
தேர்தலுககான வேட்பாளர் தெரிவின்போது ஏற்பட்ட சிக்கல்கள். சிலவேளை பொருத்தமற்ற வேட்பாளர்கள் தெரிவானமை.மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தும் ஆனால் பணபலமற்றவர்கள் கல்வித்தரம்குறைந்தவர்கள் அதேவேளை கட்சியில் பழையஉறுப்பினராயிருப்பார்கள் ஆனால் மக்கள்மத்தியில் செல்வாக்கில்லாதவர்கள். இவ்வாறான சமநிலைத்தளம்பலுள்ள வேட்பாளர் தெரிவும் ஒரு காரணம். எமது கூட்டமைப்பிற்குள்ளுள்ள ஏனைய பங்காளிக்கட்சிகளின் தலையீடுகள் இப்படி. கட்சி மற்றது தனிநபர்செல்வாக்கு தேவைப்பட்டது. அது குறைவு.
மூன்றாவது காரணம்!
ஏனைய கட்சிகளைப்போல் த.தே.கூட்டமைப்பிற்கென ஒரு தனியான ஊடகம் இல்லை. அதனால் எமது கொள்கைகளை செற்றிட்டங்களை சொல்லுவதில் பின்னடைவு இருந்ததையும் கூறமுடியும்.

கேள்வி: தேர்தல் முடிவடைந்துவிட்டது. மாவட்டத்தின் த.தே.கூ. முகவர் என்ற அடிப்படையில் இனி உங்களது சபைகளில் கூட்டாட்சிக்கான வியூகம் தவிசாளர் பிரதிதவிசாளர் தெரிவுகள் எவ்வாறு அமையும்?

பதில்: எமது கொள்கைகளோடு ஒத்துப்போகின்ற கட்சிகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடாத்தி கூட்டாட்சி அமைக்கும்பணியில் ஈடுபடுவோம். தேசியத்திற்கு விரோதமான கட்சிகளுடன் கூட்டுச்சேரமாட்டோம். உதாரணமாக மகிந்தவின் மொட்டுக்கட்சியுடன் சேரமாட்டோம். கூட்டாட்சியூடாக அனைவரினதும் சம்மதத்துடன் தவிசாளர் பிரதிதவிசாளர் தெரிவு இடம்பெறும்.

கேள்வி: அம்பாறை மாவட்டத்தின் முகவராக இருக்கிறீர்கள். உங்களது சொந்த ஆலையடிவேம்பு சபையினதும் சம்மாந்துறை சபையினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்ததே. காரணம் என்ன?

பதில்: ஆலையடிவேம்புசபையினூடாக எமது பலத்தை உலகிற்கும் எமது கட்சிக்கும் எடுத்துக்காட்டவேண்டும் என்பதற்காக தரமான வேட்பாளர்களை நியமித்திருந்தேன். ஆனால் துரதிஸ்டவசமாக அம்பாறைக்கச்சேரியில் நான்போய் அரசஅதிபரிடம் பேசிக்கொண்டிருந்தவேளையில் என்னுடன்வந்த பிரமுகர் வேட்புமனுவை நீட்டிவிட்டார். மறுகணம் அந்தஇடத்தில் நான் சொன்னேன். தவறுதலாக அவர்தந்துவிட்டார் என்று. அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
கேள்வி: கல்முனை மாநகரசபை கூட்டாட்சி பற்றி பரவலாக கதையடிபடுகின்றது.அங்க உங்களது வியூகம் எவ்வாறு அமையும்?

பதில்: எமது நீண்டகால பிரதேசசெயலக தரமுயர்த்தல் பிரதேசபை உருவாக்கம் மற்றும் நகரஅபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளில் கல்முனைவாழ்தமிழ்மக்களின் அபிலாசைகளுடன் ஒத்துப்போகின்ற குறிப்பிட்ட காலஅட்டவணையினுள் நிவர்த்திசெய்வோமென கைச்சாத்திடும் எந்தக்கட்சியுடனும் கூட்டாட்சிஅமைப்போம்.

கேள்வி: காரைதீவு பிரதேசசபை கன்னித்தேர்தலில் 2006இல் ததேகூட்டமைப்பிற்கு 6059வாக்குகளும் 2011இல் 4284 வாக்குகளும் கிடைத்தது. த.அ.கட்சிக்கோட்டையான காரைதீவில் இம்முறை ஆக 3202 வாக்குகளே கிடைக்கப்பெற்றுள்ளது. இது பாரிய சரிவு இல்லையா?

பதில்: அது இந்த கலப்புமுறைத் தேர்தல்முறைமையின் விளைவே தவிர அது சரிவல்ல. இந்ததேர்தல் குடும்ப ஆதிக்கம் குடும்பச்செல்வாக்குடன் தனிநபர் மற்றும் கட்சி செல்வாக்கும் சேர்ந்தது.
கேள்வி: அப்போ . அது சரிவில்லையா?
பதில்: பாரிய சரிவல்ல. சிறுசரிவுதான். ஆனால் நாம் அமைத்த வியூகத்தின் பயனாகவே சுயேச்சை மற்றும் நாம் இணைந்து 6 ஆசனங்களைப் பெறமுடிந்தது. இதனையே அன்று மகாசபையிடம் சொன்னேன்.

கேள்வி: சரி அப்படியெனின் காரைதீவில் எவ்வாறு கூட்டாட்சி அமைப்பீர்கள்? உங்கள் வியூகம் என்ன?
பதில்;; : காரைதீவின் புதல்வர்கள்தான் த.தே.கூட்டமைப்பிலும் சுயேச்சையிலும் கேட்டார்கள். அவர்களும் தேசியத்திற்காக உழைத்தவர்களே. நாம் யாரையும் பிரித்துப்பார்க்கவில்லை. எனவே நாம் சுயேச்சையுடன் இணைந்து மேலுமொரு ஆசனத்துடன் ஆட்சியமைப்போம். தேர்தல் முடிந்துவிட்டது. எமது காரைதீவு அபிவிருத்திதான் இனி எமது இலக்கு.

கேள்வி: அம்பாறை தமிழ் சபைகளில் வழமைக்கு மாறாக சு.கட்சியின் செல்வாக்கு உயர்ந்திருக்கின்றது. ஒருநாளும் இல்லாத காரைதீவில் 2ஆசனங்கள் ஆலையடிவேம்பில் 5ஆசனங்கள் திருக்கோவிலில் 3ஆசனங்கள் நாவிதன்வெளியில் ஓரு ஆசனத்தையும் பெற்றுள்ளதே. இது உங்களின் பலவீனமா? அல்லது அவர்களை தமிழ் மக்கள் ஏற்றுள்ளார்களா?

பதில்: இதுவும் ஒருவகையில் கலப்புமுறைத்தேர்தலின் விளைவுகளில் ஒன்றுதான். குடும்பச்செல்வாக்கு ஆதிக்கம்செலுத்தியுள்ளது.தனிநபர் செல்வாக்கும்அதில் உள்ளடக்கம்.

கேள்வி: இத்தேர்தலில் கூடுதலாக கையூட்டல்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதே?

பதில்: இத்தேர்தலில் என்றுமில்லாதவாறு பணம் செலவழிக்கப்பட்டிருக்கின்றது என்பது உண்மை. தேர்தல் அணையாளரே கூறயிருக்கிறார். குடும்பத்திற்கு 5ஆயிரம் வரைகொடுத்துள்ளனர்.பல பொருட்கள் கொடுத்துள்ளனர். கறன்ட்பில் கட்டியிருக்கிறார்கள். ஒரு வாக்கிற்கு 200ருபா வழங்கியுள்ளனர். இப்படி பல கையூட்டல்கள்.
கேள்வி: இறுதியாக. த.தே.கூட்டமைப்பு ஒரு சுயமதிப்பீடு செய்துகொண்டு அபிவிருத்திகாணத் தேவையில்லை என்று கருதுகிறீர்களா?
பதில்: நிச்சயமாக. ஒரு முடிவு வருகின்றபோது அதுதொடர்பாக ஆராய்ந்து சாதக பாதகங்களை அறிந்து எதிர்காலத்தை முன்னெடுத்துச்செல்லவேண்டிய கட்டாயமுள்ளது. நிறைய அனுபவமுள்ளவர்களுள்ளனர். அதனைச்செய்வார்கள்.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -